Asianet News TamilAsianet News Tamil

ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என அனைத்து வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம்.. உத்தரவிட மறுத்தது நீதி மன்றம்.

ஓட்டுக்கு பணம் பெற வில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரியா பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


 

Chennai High Court Denied  For Order to  Election Commission for  swear to all the voters that did not Receive Money for the vote.
Author
Chennai, First Published Mar 2, 2021, 4:16 PM IST

ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என அனைத்து வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம் பெற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என நீதி மன்றம் மறுத்துள்ளது.  தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், ஓட்டுக்கு பணம் பெற வில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரியா பகவான் தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

Chennai High Court Denied  For Order to  Election Commission for  swear to all the voters that did not Receive Money for the vote.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

Chennai High Court Denied  For Order to  Election Commission for  swear to all the voters that did not Receive Money for the vote.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்பதால், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அது நீதிமன்றத்தின் பணியல்ல எனவும்,  இதுசம்பந்தமாக மனுதாரர் அரசை அணுகலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios