ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றுங்கள்...!! அதிருப்பதியடைந்த மோடி, அதிரடி உத்தரவு...!!
இந்நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு நிலையை முறையாக கடைபிடிக்கவில்லை எனவும் மக்களின் ஒத்துழைப்பு திருப்தியானதாக இல்லை எனவும் கவலை தெரிவித்திருந்தார் .
கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது . இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசின் இவ்உத்தரவை கடுமையாக்கியுள்ளத. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத்தட்ட மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
உலகளவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமெடுக்க தொடங்கியுள்ளது இதுவரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 417 ஆக உயர்ந்துள்ளது . கொரனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 நெருங்கியுள்ளது இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மக்கள் தாங்களாகவே முன்வந்து ஊரடங்கு நிலையை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது இந்நிலையில் நேற்று ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது . இந்நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி மக்கள் ஊரடங்கு நிலையை முறையாக கடைபிடிக்கவில்லை எனவும் மக்களின் ஒத்துழைப்பு திருப்தியானதாக இல்லை எனவும் கவலை தெரிவித்திருந்தார் .
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது எனவே ஊரடங்கு உத்தரவை மாநில அரசுகள் கடுமையாக்க வேண்டும் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது
. எனவே இன்று முதல் மாநில அரசுகள் ஊரடங்கு கடுமையாக பின்பற்றிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே அரசு அலுவலகங்கள் , தனியார் நிறுவனங்கள், திரையரங்குகள் , வணிக வளாகங்கள் , பொது போக்குவரத்து போன்றவற்றை முற்றிலுமாக மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து கடுமையான ஊரடங்காக 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . எனவே மக்கள் ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்க தயாராகி வருகின்றனர்.