Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்க அதிரடி நடவடிக்கை..!! புதிதாக 18 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி

 இதனால் தினமும் ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகிறது. 

central government concern to corona virus test result delay and gave permission to 18 new labs for test
Author
Delhi, First Published Mar 20, 2020, 4:21 PM IST

இந்தியாவில் குழுவினர் வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்ய 18 தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது .  இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான பரிசோதனை முடிவுகள் வேகமாக கிடைக்கும் வகையில் பரிசோதனை   மையங்கள்  அதிகம் தேவைப்படுகிறது என்பதால் மந்திய அரசு  இந்த நடவடிக்கை எடுத்துள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா  உலகம் முழுவதும் பரவியது மக்களை அச்சுறுத்தி வருகிறது .

central government concern to corona virus test result delay and gave permission to 18 new labs for test 

உலக அளவில் இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .  லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோர் குறுநாவல் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த வைரசுக்கு இதுவரை இந்தியாவில் ஐந்து பேர் பலியாகி உள்ளனர் . கொரோனாவை  கட்டுப்படுத்த நாடு முழுதும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .  இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு  விமான நிலையங்களில்  தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது .

central government concern to corona virus test result delay and gave permission to 18 new labs for test  

அதேபோல் கொரோனா இருப்பவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படுகிறது .  அதுபோல் சளி இருமல் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன்  மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு  கரோனா வைரஸ் சோதனை நடத்தப்படுகிறது .  இதனால் தினமும் ஆயிரக்கணக்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகிறது.  அரசு நிறுவன ஆய்வகங்களில் மட்டும் பரிசோதனை செய்யப்படுவதால் ஆய்வு முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது .  ஆய்வு முடிவுகள் உடனடியாக கிடைக்கும் வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை செய்வதற்கு 18 தனியார் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது .  
 

Follow Us:
Download App:
  • android
  • ios