அம்மா இருந்த இடத்தில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று காரணம் சொல்லியே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு யாரும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர். அப்படி இருக்கும் போது, “அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் வாழ்க” என்று தன் ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷத்தை ஓபிஎஸ் எப்படி கேட்டும் கேட்காமல் கடந்து போனார் என்பதே கேள்வி.

பசும்பொன்முத்துராமலிங்கத்தேவரின் 114-வதுஜெயந்திமற்றும் 59-வதுகுருபூஜைஇன்றுகொண்டாடப்படுகிறது. அதனைமுன்னிட்டுஅதிமுகஒருங்கிணைப்பாளரும், தமிழகசட்டமன்றஎதிர்க்கட்சிதுணைத்தலைவருமான.பன்னீர்செல்வம்இன்றுகாலைதேனிமாவட்டம்பெரியகுளம்தென்கரையில்அமைந்துள்ளதேவரின்திருவுருவச்சிலைக்குமாலை மற்றும் மலர் கிரீடம்அணிவித்தார். பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடம் கோவிலாக பார்க்கப்படுகிறது. எனவே தான் சமீபத்தில் தன் மனைவி இறந்ததால் ஓபிஎஸ் அங்கு செல்லவில்லை. இந்த நிகழ்வின்போது அங்கிருந்த தொண்டர்கள் பலரும் “அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் வாழ்க” என்று கோஷமெழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில்சசிகலாவைசேர்ப்பதுகுறித்துகழகநிர்வாகிகள்முடிவெடுப்பர்எனஓபிஎஸ்மதுரையில்கடந்தசிலதினங்களுக்குமுன்னர்செய்தியாளர்கள்சந்திப்பில்பேசியிருந்தார். இதுஅதிமுகவில்பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாமறைவுக்குபின்னர் உடைந்தஅதிமுகவின்இருஅணிகள்இணைவதற்குசசிகலாமற்றும்அவரதுகுடும்பத்தினரைஅதிமுகவில்எந்தகாலத்திலும்சேர்க்கக்கூடாதுஎன்றகோரிக்கையைமுன்வைத்ததேஓபிஎஸ் தான். அப்படியிருக்கும் நிலையில் அவரது இந்த திடீர் நிலைமாற்றம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அவரது இந்தக் கருத்திற்கு உடனடியாக எதிர்வினையாற்றினார் ஈபிஎஸ். சசிகலாவுக்குஅதிமுவில்எப்போதும்இடமில்லைஎனகூறியிருந்தார். இவர்கள் இடையிலான இந்தப் பனிப்போர் அரசியல் களத்தின் பிரதான விவாத பொருளானது. இந்நிலையில் தான் “அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்” என்ற கோஷம் அவரது ஆதரவாளார்களால் எழுப்பப்பட்டுள்ளது.

அம்மா இருந்த இடத்தில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்று காரணம் சொல்லியே ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு யாரும் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்தனர். அப்படி இருக்கும் போது, “அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ் வாழ்க” என்று தன் ஆதரவாளர்கள் எழுப்பிய கோஷத்தை ஓபிஎஸ் எப்படி கேட்டும் கேட்காமல் கடந்து போனார் என்பதே அனைவரின் கேள்வி. ஒருவேளை ஓபிஎஸ் தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுக்கொள்கிறாரா என்று எதிர்தரப்பினர் பேசத்தொடங்கிவிட்டனர்.

தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் யார் எதிர்கட்சித் தலைவர் என்ற பிரச்சனை எழுந்தபோது, தன்னை எதிர்கட்சித் தலைவராக்குங்கள் அல்லது கட்சியின் ஒற்றைத் தலைமையாக தன்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஓபிஎஸ் ஈபிஎஸ்சுடன் நேரடியாகவே மல்லுக்கட்டியதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போதும் அதே கட்சித் தலைமைக் கனவை மையமாக வைத்தே இந்தக் கோஷம் எழுப்பப்பட்டதா? அதிமுக உட்கட்சி தேர்தல் கட்சி மீண்டும் உடைய காரணமாக இருக்கும் என்ற அமமுகவினரின் கணக்கு சரியானதா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

ஏற்கனவே வேட்பாளர் தேர்வு, கட்சிநிர்வாகிகள்நியமனம், எதிர்க்கட்சிதலைவர், கட்சிகொறடாஉள்ளிட்டபதவிகளில் தனக்கும் தனதுஆதரவாளர்களுக்கும்வாய்ப்புகிடைக்காததால் விரக்தியில் இருப்பதாக சொல்லப்படும் ஓபிஎஸ், இன்னொரு தர்மயுத்தத்துக்கு தயாராகிறாரா என்றும் தொண்டர்கள் பேசத்தொடங்கிவிட்டனர். அதிமுகவுக்குள் வட மாவட்டம் vs தென் மாவட்டம் என்ற போர் நடந்துகொண்டிருப்பதை அரசியலை உற்றுநோக்கும் யாரும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் மறுக்கப்படும் நிலையில், தேவர் பெருமகனார் பிறந்ததினத்தன்று எழுந்துள்ள “பொதுச்செயலாளர் ஓபிஎஸ்” என்ற கோஷம் வெறும் உணர்ச்சிகளின் வெளிப்பாடா அல்லது அடுத்த அரசியல் நகர்வுக்கான தொடக்கமா என்பது இன்னும் சில வாரங்களில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.