- Home
- Tamil Nadu News
- 6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ இன்று 3ம் கட்டமாக விசாரணை நடத்தியுள்ளது. கேள்விகள் அனைத்துக்கும் விஜய் பொறுமையாக விளக்கமாக பதில் அளித்துள்ளார்.

விஜய்யிடம் சிபிஐ 3வது முறையாக விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ நடத்திய 3ம் கட்ட விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜய், இன்று காலை 11 மணி அளவில் மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். காலை 111 மணி முதல் மாலை 5.30 மணி வரை என 6 மணி நேரம் 30 நிமிடங்கள் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விஜய்யிடம் சிபிஐயிடம் கேட்ட கேள்வி
இடையில் அரை மணி நேரம் மதிய உணவு சாப்பிட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்பு தொடர்ந்து நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய விசாரணையில் விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கரூர் பொதுக்கூட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட நேரத்தை விட விஜய் சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? நீங்கள் வருவதற்கு தாமதமானதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதா? நீண்ட நேரம் மக்கள் காத்திருந்ததே நெரிசலுக்கு முக்கிய காரணமா? என்று விஜய்யிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கரூர் சம்பவத்துக்கும், செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு
நெரிசல் ஏற்பட்டபோது மேடையில் இருந்து உடனடியாக அறிவிப்புகளை வெளியிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த ஏன் முயற்சி எடுக்கப்படவில்லை? என்றும் கேட்கப்பட்டுள்ளது. அப்போது இந்த கேள்விகள் அனைத்துக்கும் விஜய் பொறுமையாக விளக்கமாக பதில் அளித்துள்ளார். மேலும் மிக முக்கியமாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு? என விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்டுள்ளனர்.
விஜய் சொன்னது என்ன?
அதாவது கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி சில குளறுபடிகளை ஏற்படுத்தியதால் தான் உயிரிழப்புக்கு காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக நேரில் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இந்த நிலையில், கரூர் சம்பவத்துக்கும், செந்தில் பாலாஜிக்கும் என்ன தொடர்பு? எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு முன்வைக்கிறீர்கள்? என விஜய்யிடம் சிபிஐ கேட்டதாக கூறப்படுகிறது. இந்த கேள்விக்கும் விஜய் உரிய பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

