தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடங்கியது.! மகிழ்ச்சியில் பயணிகள்.!
தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வரும் 7-ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளநிலையில், இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வரும் 7-ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளநிலையில், இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வரும் 7-ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்து 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே இயக்கப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.இதனை ஏற்று, கூடுதலாக, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா், சென்னை சென்ட்ரல் -மேட்டுப்பாளையம், சென்னை-மதுரை, சென்னை -கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி , சென்னை-செங்கோட்டை ஆகிய 6 சிறப்பு ரயில்கள் உள்பட 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்த 13 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள டிக்கெட் கவுண்டா்கள் மூலமாகவும் ஆன்லைன் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 5 மாதங்களுக்குப் பிறகு முக்கியமான ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஆன்லைன் மூலமாக ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருவதால் கடந்த முறைபோல் முன்பதிவுக்கான தளமே முடங்கியது போல் இந்த முறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.