பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் அந்த கட்சி மண்ணைக் கவ்வும் நிலை உருவாகியுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்தஆண்டு நடக்கஇருக்கும்நாடாளுமன்றமக்களவைத்தேர்தலுக்குமுன்னோட்டம்என்றுகருதப்படும்ஐந்துமாநிலசட்டமன்றத்தேர்தல்வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
வடகிழக்குமாநிலமானமிசோரம், வடஇந்தியமாநிலங்களானசத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியஇந்தியாவானமத்தியப்பிரதேசம், தென்னிந்தியமாநிலமானதெலங்கானாஎன்றுஇந்தியாவின்அனைத்துப்பகுதிகளையும்உள்ளடக்கியமாநிலத்தேர்தல்முடிவுகள்என்பதால்இதுஒட்டுமொத்தஇந்தியாவின்தேர்தல்முடிவாகஎதிர்நோக்கப்படுகிறது.

சத்தீஸ்கர் , மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானாஎன 5 மாநிலங்களிலும் இன்று வாக்குகஙள எண்ணப்பட்டு வருகின்றன.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்மாநிலங்களில்பாஜகஆட்சிநடந்துவருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி 84 இடங்களிலும், பாஜக 71 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தைப் பொறுத்த வரை காங்கிரஸ் 77 இடங்களிலும், பாஜக 60 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
சத்தீஷ்கரில் காங்கிரஸ் 42 இடங்களிலும், பாஜக 26 இடங்களிலம் முன்னிலை பெறறுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக தோல்வி முகத்துடன் உள்ளது.
