Asianet News TamilAsianet News Tamil

விட்டதைப் பிடிக்க முயற்சிக்கும் முன்னாள் அமைச்சர்... ஓசூரில் மனைவிக்கு சீட்டு கேட்கிறார்!

நீதிமன்ற தண்டனையால் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்த பாலகிருஷ்ணா ரெட்டி, ஓசூர் தொகுதியில் தனது மனைவிக்காக சீட்டு கேட்டு விருப்ப மனு அளித்திருக்கிறார்.
 

Balakrishna expecting Hosur constituency for his wife
Author
Chennai, First Published Mar 15, 2019, 7:17 AM IST

Balakrishna expecting Hosur constituency for his wife

தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு எதிராக எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்துவந்தது. அந்த வழக்கில் பாலகிருஷ்ணா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அவரது எம்.எல்.ஏ. பதவி தானாகப் பறிபோனது. இதனால், அமைச்சர் பதவியையும் இழந்தார். Balakrishna expecting Hosur constituency for his wife
இதையடுத்து ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.  வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஓசூர் தொகுதியிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. ஓசூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி, அதிமுக தலைமையகத்தில் மனு கொடுத்தார். அப்போது பாலகிருஷ்ணாவும் உடன் இருந்தார்.

Balakrishna expecting Hosur constituency for his wife
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “என் மனைவி மனைவி 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை ஓசூர் பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருந்துள்ளார். பொது வாழ்வில் அவருக்கு அனுபவம் உள்ளது. இந்தத் தொகுதியில் எனது மனைவிக்கு சீட்டு கிடைப்பது பற்றி கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தார். ஆனால், இதே தொகுதியில் போட்டியிட அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் ஆர்வம் காட்டிவருகிறார். இந்தத் தேர்தலில் பெற்றி பெற்று தமிழக அமைச்சராகும் முடிவில் அவர் இருக்கிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. 

Follow Us:
Download App:
  • android
  • ios