தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக  ஆட்சியை எந்த கொம்பனாலும் கவிழ்க்க முடியாது என்றும் யாராவது இந்த ஆட்சி குறித்து தப்பா பேசினால் அவங்க நாக்கை அறுத்துவிடுவேன் என அமைச்சர் துரைக்கண்ணு அதிரடியாகப் பேசினார்.

ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சையில்நடந்த. பொதுக்கூட்டத்தில்தஞ்சைவடக்குமாவட்டசெயலாளரும், வேளாண்மைத்துறைஅமைச்சருமானதுரைக்கண்ணுபங்கேற்றுப் பேசினார்.

அப்போது ஊழலைகண்டுபிடித்தவர்கள்தி.மு..வினர்தான். மக்களுக்குவழங்கப்பட்டகோதுமையில்ஊழல், விவசாயத்திற்காகபூச்சிமருந்துவழங்கியதில்ஊழல், மின்சாரம், நிலக்கரிபேரத்தில்ஊழல்எனஅனைத்திலும்ஊழல்செய்தவர்கள்தி.மு..வினர். லஞ்சத்தில்திளைத்தவர்கள்தி.மு..வினர். இதனைதமிழகமக்கள்மறக்கமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

தற்போது தமிழகத்தில்அம்மாவின் பொற்காலஆட்சிநடக்கிறது.இதை இபிஎஸ் சிறப்பாக நடத்தி வருகிறார். வேளாண்மைத்துறை, உள்ளாட்சித்துறைஎனஅனைத்திலும்வளர்ச்சி. வறட்சியிலும்வளர்ச்சிகண்டுவருகிறதுதமிழகஅரசு.

இந்தசிறப்பான ஆட்சிஇன்றைக்குகவிழ்ந்துவிடும், நாளைக்குகவிழ்ந்துவிடும்என்றுதினமும்குடுகுடுப்பைக்காரன்போல்சிலர்பேசிவருகிறார்கள். தமிழகத்தில்எடப்பாடி, .பி.எஸ்., தஞ்சைமண்ணின்மைந்தன்வைத்திலிங்கம்இருக்கும்வரைஇந்தஆட்சியை, கட்சியைஎவராலும்அசைக்கமுடியாது என அவர் ஆவேசமாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய துரைக்கண்ணு தற்போது நடைபெற்று வரும் இந்தஆட்சியைலஞ்சஆட்சிஎனயாராவது தவறாகபேசினால் அவர்களின் நாக்கை அறுத்துவிடுவேன் என்றார். அமைச்சரின் இந்தப் பேச்சு அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது