Asianet News TamilAsianet News Tamil

எதிர்கட்சி மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிக்கும் அதிமுக அரசு.! மக்கள் தண்டனை வழங்கும் காலம் வரும்.! ஸ்டாலின்.

அரசு விழாக்கள், ஆய்வு கூட்டங்களில், எதிர்க்கட்சி எம்.பி.எம்.எல்.ஏ.,க்களை பங்கேற்கவிடாமல், வேண்டுமென்றே தொடர்ந்து, அ.தி.மு.க., அரசு புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின குற்றம் சாட்டியுள்ளார்.
 

AIADMK government ignores opposition people's representatives! The time will come when people will be punished.! Stalin.
Author
Tamil Nadu, First Published Aug 22, 2020, 8:32 AM IST

அரசு விழாக்கள், ஆய்வு கூட்டங்களில், எதிர்க்கட்சி எம்.பி.எம்.எல்.ஏ.,க்களை பங்கேற்கவிடாமல், வேண்டுமென்றே தொடர்ந்து, அ.தி.மு.க., அரசு புறக்கணிப்பது கண்டனத்துக்குரியது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின குற்றம் சாட்டியுள்ளார்.

AIADMK government ignores opposition people's representatives! The time will come when people will be punished.! Stalin.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "தர்மபுரியில் நடந்த, கொரோனா குறித்த ஆய்வு கூட்டத்தில், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமாரை அனுமதிக்கவில்லை. 'நான் நடத்தும் ஆய்வு கூட்டங்களில், எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும்' என, முதல்வர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியிருப்பது ஜனநாயக விரோதம்; பண்பாடற்ற செயல்; அநாகரிகத்தின் உச்சம்.வேலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், கட்சி நடத்தும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதி கேட்கவில்லை. கொரோனா நோய், மரணங்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தான் அனுமதி வேண்டும் என, தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கேட்கின்றனர்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அவமதிக்கும் போக்கை, முதல்வரும், அ.தி.மு.க., அமைச்சர்களும் கைவிட வேண்டும். கைவிடாவிட்டால் கடுமையாக மக்கள் தண்டிப்பர்".


 

Follow Us:
Download App:
  • android
  • ios