Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ்சை கதறவைத்துவிட்டு, கல்யாணத்தில் பாட்டு பாடி என்ஜாய் பண்ண ஜெயக்குமார்.

இரட்டைத்தலைமையா ஒற்றைத் தலைமையா என கட்சியே களேபரம் பட்டு நிற்கும் நிலையில் ஜெயக்குமார் கல்யாண வீட்டில் அழகிய தமிழ் மகள் இவள் என பாட்டு  பாடி  மகிழ்ச்சியாக உள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.


 

After Screaming the OPS, Jayakumar enjoys singing at the wedding.
Author
Chennai, First Published Jun 22, 2022, 5:15 PM IST

இரட்டைத்தலைமையா ஒற்றைத் தலைமையா என கட்சியே களேபரம் பட்டு நிற்கும் நிலையில் ஜெயக்குமார் கல்யாண வீட்டில் அழகிய தமிழ் மகள் இவள் என பாட்டு  பாடி  மகிழ்ச்சியாக உள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் அவரே வெளியிட்டுள்ளார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சர், மூத்த தலைவர் எனக்கு எத்தனையோ பதவிகளை அலங்கரித்து இருந்தாலும் எவருடனும் எதார்த்தமாக பழகக்கூடியவர் ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றால் வெள்ளையும் சொள்ளையுமாக காட்சியளிப்பார்கள் சாமானிய மக்கள் எளிதில் அணுக முடியாது என்ற நிலை இருந்து வருகிறது.

ஆனால் எப்படிப்பட்ட வர்களும் எளிதில் அணுகும் சாமானியராகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் ஜெயக்குமார். எப்போதும் செல்லும் இடங்களில் தனக்கென தனித்துவத்தை உருவாக்குவதில் ஜெயக்குமாருக்கு நிகர், ஜெயக்குமார் தான் என்று சொல்லுமளவிற்கு அவரின் நடவடிக்கைகள் இருக்கும். செல்லும் வழியில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவது, விலங்குகளைக் கண்டால் காரை நிறுத்தி உணவு கொடுப்பது.

After Screaming the OPS, Jayakumar enjoys singing at the wedding.

கச்சேரி மேடைகள் கிடைத்தால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பாடல்களை பாடுவது, நடனமாடுவது என தன்னைச்  சுற்றியிருப்பவர்கள் எப்போதும் கலகலப்பாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பார் ஜெயக்குமார். எந்த சூழ்நிலையையும் யதார்த்தமாக, இலகுவாக கையாளுவதில் வல்லவர். அதனால் தான் இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட கட்சி சார்ந்த விஷயங்களுக்கு ஊடகங்களை தன்மையாக கையாளக் கூடியவர், அதனால்தான் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்கூடியவராக அவர் இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் அவர் பேசும் விஷயங்கள் கூர்மையானவை, ஆழமான கருத்துடையவை, எவரையும் கடுமையான வார்த்தைகள் இல்லாமல் போகிற போக்கில் கலாய்க்கும் வகையிலான சொல்லாற்றல் மிக்கவர் ஜெயக்குமார். இப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டுமென்று அவர் பற்ற வைத்த நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

அதிமுகவே இரண்டாக  பிளவு படும் அளவிற்கு அவரின் அந்த ஒற்றை வார்த்தை இருந்துள்ளது. இந்நிலையில் கட்சிக்குள் ஒற்றைத் தலைமையை வேண்டும் என்ற முழக்கம் மாநிலம் முழுவதிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அணி அணியாக வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

 

அமைதியாக இருந்த கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியது ஜெயகுமார்தான் அவர்தான் ஒற்றைத்தலைமை என்ற பிரச்சனையை துவக்கி வைத்தவர் என ஓபிஎஸ் வெளிப்படையாக புலம்பும் அளவிற்கு ஜெயக்குமாரின் பேச்சு இருந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கட்சியே கலவரப்பட்டுள்ள நிலையில் எதைக் குறித்தும் கவலைப்படாமல் தனக்கே உரிய பாணியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அங்கே ஆர்கெஸ்ட்ராவில் அவர் " அழகிய தமிழ் மகன் இவள்" பாடலைப் பாடி  மகிழ்ந்துள்ளார்.

தன்னை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஜெயக்குமார்.  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசைக்கு ஏற்ப அழகிய தமிழ் மகள் இவள் என பாட்டு பாடி அசத்தியுள்ள வீடியோவை அவரே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் பாராட்டி,ரசித்து வருகின்றனர். அதில் பார்க்கும் சிலர் ஓபிஎஸ்சை கதற வைத்துவிட்டு கல்யாணத்தில் பாட்டு பாடி என்ஜாய் செய்வது நியாயம்தானா? என விமர்சித்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios