Asianet News TamilAsianet News Tamil

8 வழிச்சாலை அமைக்கப்படுமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி சரவெடி பதில்.. விவசாயிகள் அதிர்ச்சி..!

திமுக ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வந்தபோது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா என முதல்வர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

8 way road issue..Cm Edappadi Palanisamy Answer
Author
Thiruvarur, First Published Dec 9, 2020, 4:23 PM IST

விடுபட்ட பகுதிகளிலும் புயல், மழை சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். 

புயல், மழை சேதகங்கை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- டெல்டா சமபரப்பாக இருப்பதாலும் கடல் சீற்றத்தாலும் மழைநீர் கடலுக்கு செல்ல முடியாமல் தண்ணீர் தேங்குகிறது. 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள்?  பயனளிக்கும் என்பதால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை தமிழக அரசு வரவேற்கிறது. மற்ற மாநிலங்களில் இடைத்தரகர்கள் இருப்பதால் அதை அகற்ற மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. 

8 way road issue..Cm Edappadi Palanisamy Answer

விளைபொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்கவேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம். விருப்பப்பட்டால் மட்டுமே வேளாண் சட்டத்தை தமிழக விவசாயிகள் பயன்படுத்தலாம்.  8 வழிச்சாலை அமைக்கப்படுமா என முதல்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க விரிவாக்கம் அவசியம். 

8 way road issue..Cm Edappadi Palanisamy Answer

8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம். நிலம் கையப்படுத்தியது மட்டுமே மாநில அரசு என்றார். 8 வழிச்சாலை என்பது நீண்ட கால திட்டம். இப்போது தொடங்கினால் கூட முடிய 6 ஆண்டுகளாகும். வெளிநாடுகளில் குறைந்தபட்சமே 8 வழிச்சாலைதான் உள்ளது. நாடு, தொழில் வளர்ச்சிக்கு சாலை அவசியம். திமுக ஆட்சியில் 17 நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் கொண்டு வந்தபோது சுற்றுச்சூழல் பாதிக்கவில்லையா என முதல்வர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios