லிப்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது? இதுக்கு பின்னால் இவ்வளவு காரணங்கள் இருக்கா?

லிஃப்ட்களில் கண்ணாடிகள் இருப்பதற்கு தோற்றத்தை சரிபார்த்துக் கொள்வதைத் தாண்டி பல முக்கிய காரணங்கள் உள்ளன. கிளாஸ்ட்ரோஃபோபியாவைத் தணிப்பது, கவனத்தைத் திசை திருப்புவது மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற காரணங்களுக்காக லிஃப்ட்களில் கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன.

Why are there mirrors in Elevators ? know the reason behind this Rya

எந்த ஒரு ஷாப்பின் மாலின் லிஃப்ட் உள்ளே சென்றாலும் அங்கே கண்ணாடி இருப்பதை பார்த்திருப்போம். பெரும்பாலான மக்கள் லிப்டில் நுழைந்தவுடன் கண்ணாடியில் தங்களை சரிபார்த்துக் கொள்கின்றனர். தங்கள் தலைமுடியை நேராக்குகிறார்கள், தங்கள் ஆடைகளை சரிசெய்து, தங்களின் அழகை ரசிக்கின்றனர். ஆனால் லிப்டில் உள்ள கண்ணாடி இந்த காரணத்திற்காக மட்டும் இருக்கிறதா அல்லது அதற்கு ஏதேனும் சிறப்பு நோக்கம் உள்ளதா?  லிப்டில் ஏன் கண்ணாடி இருக்கிறது? அதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

லிஃப்ட்களில் உள்ள கண்ணாடிகள் ஒருவரின் தலைமுடியை நேராக்க அல்லது கடைசி நிமிடத்தில் தோற்றத்தை சரிபார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மக்கள் லிஃப்ட் கண்ணாடிகளை வேனிட்டி மிரர்களாக அல்லது செல்ஃபி எடுக்க விரும்பினாலும், லிஃப்ட்டுகளுக்குள் கண்ணாடிகள் இருப்பதற்கு இன்னும் பல முக்கிய காரணங்கள் உள்ளன.

இந்த மழைக்காலத்தில் ஏசியை எப்படி யூஸ் பண்ணனும்? இதை மட்டும் செய்யாதீங்க!

ஜப்பான் எலிவேட்டர் அசோசியேஷன் அதன் வழிகாட்டுதல்களில் ஒவ்வொரு லிஃப்டிலும் கண்ணாடியை நிறுவுவது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளது. கண்ணாடிகளை நிறுவுவதற்கான காரணங்கள் பயனாளிகளின் மனநலத்துடன் தொடர்புடையவை. லிஃப்ட் உள்ளே கண்ணாடி இருப்பதற்கான முக்கிய காரணங்களில் சில இதோ.

கிளாஸ்ட்ரோஃபோபியா

பலருக்கு, லிஃப்டில் கிளாஸ்ட்ரோபோபிக் ஏற்படுவது மிகவும் பொதுவானது. வரையறுக்கப்பட்ட இடம், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க இயலாமை ஆகியவை அனைத்தும் பதட்டத்திற்கு பங்களிக்கும் காரணிகள் ஆகும். படபடப்பு அதிகமாகும் போது மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது. கண்ணாடி இருப்பதால், லிப்ட் மிகவும் பெரியதாக தெரிகிறது. லிப்டில் அதிக ஆட்கள் இருக்கும்போது கண்ணாடி இல்லாதபோதும் லிப்ட்டின் அளவு சிறியதாக இருக்கும். கண்ணாடி இருப்பதால், லிப்டில் திறந்த உணர்வு உள்ளது. இதன் மூலம் மக்கள் மூச்சுத் விடுவதில் எந்த சிக்கலும் இல்லை.

கண்ணாடியை நிறுவுவதற்கான மற்றொரு பெரிய காரணம் மக்களை திசை திருப்புவதாகும். ஷாப்பிங் மால்களில் உள்ள லிப்ட்களில், மக்கள் அதிக நேரம் லிப்டில் செலவிட வேண்டியுள்ளது. இதன் காரணமாக, லிப்டில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது, இதனால் அவர்களின் கவனம் திசைதிருப்பப்படுகிறது, மேலும் அவர்கள் லிப்டில் பூட்டப்பட்டிருப்பதையோ அல்லது எந்த உயரத்திற்கு செல்கிறோம் என்பதையோ அவர்கள் உணர மாட்டார்கள். இது தவிர, லிப்ஃப்ட்டில் சில நேரங்களில் சலிப்புணர்வு ஏற்படும். இந்த உணர்வில் இருந்து அவர்களைக் காப்பாற்ற கண்ணாடியும் பயன்படுகிறது. தங்களைப் பார்த்துக் கொண்டே காலத்தைக் கடத்துகிறார்கள்.

இந்தியாவின் விலையுயர்ந்த எருமை இதுதான்! இந்த விலைக்கு 2 ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிடலாம்!

லிஃப்ட்களில் கண்ணாடியை நிறுவுவதற்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்று மக்களின் பாதுகாப்பு. லிப்ட்களில் நடக்கும் குற்றங்களை நீங்கள் படங்களில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். குற்றங்களில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு,  லிஃப்ட்களில் கண்ணாடி நிறுவப்பட்டுள்ளது. கண்ணாடி இருப்பதால் மக்கள் தங்களைத் தாங்களே கண்காணித்துக்கொள்வதோடு, முன்னால் மற்றும் பின்னால் இருப்பவர்களையும் கண்காணிக்க முடியும். மேலும் அவர்களின் சந்தேகத்திற்கிடமான செயல்களையும் கவனிக்க முடியும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios