what is the thiruneeru wer need to put on forehead



உண்மையான திருநீறு எது ? மோதிர விரலால் மட்டுமே எடுக்க வேண்டுமா...?  

உண்மையான திருநீறு எது ?

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க  அதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். பின்னர் இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்

இந்த திருநீற்றை நம் நெற்றிகளில் எங்கு வைக்க  வேண்டும் ,  அதனால்  என்னென்ன  பழங்கள் ஏற்படும் என்பதை  பார்க்கலாம் .

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி  (விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3. நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது.

பழங்காலத்திலேயே   இது போன்ற அனைத்து   கையாள வேண்டிய முறைகளும், நம்  முன்னோர்கள்  தெரிவித்துள்ளனர். ஆனால் நாம் அதனை பின்பற்று கிறோமா  என்றால் , கண்டிப்பாக இல்லை என்று தான் கூற முடியும் .

குறிப்பாக  சேலம்  ஈரோடு  கோவை  உள்ளிட்ட  மாவட்ட  மக்கள் இன்று வரை  நெற்றியில்  திருநீறு  இடுவதை  பின்பற்றி  வருகிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது