கருப்பை நீர்க்கட்டியால் அவதியுறும் பெண்களா நீங்கள்......??

மாறி வரும் காலத்திற்கு ஏற்ப எல்லாமே மாறிவிட்டது என்றுதான் சொல்ல முடியும். குறிப்பாக நாம் மேற்கொள்ளும் உணவு பழக்கம் தான் முக்கிய காரணம்.

கலப்பிட உணவை தவிர வேறு எந்த உணவையும் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு இன்றைய வாழ்க்கை முறை இருக்கிறது.

இதன் விளைவாக , அதிகம் பாதிக்கபடுவது பெண்களே.....!

குழந்தை பேறு என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம் தான் .....!ஒரு பெண் நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்றால், அப்பெண் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.

ஆனால், இன்றுள்ள இளம் பெண்களை வாட்டி வதைப்பது, கருப்பை நீர்க்கட்டி {poly cystic overian disease }.

விளைவுகள் என்ன ?

 மாதவிடாய் கோளாறு,

 உடல் பருமன்,

 வயிற்றுவலி

 வயிறு உப்புசம்

முதுகு வலி தசை பிடிப்பு

கருப்பை நீர்க்கட்டியை இயற்கையாக சரி செய்ய வழி :

ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும்.

பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

இப்படி வாரத்திற்கு மூன்று முறை என, மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் விரைவில் கரைந்துவிடும். 

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எந்த பக்க விளைவுகளும் கிடையாதாம்.......அதே வேளையில் நீர்க்கட்டிகள் குறைந்து முழு நிவாரணம் பெறலாம்.

 குறிப்பு : கருத்தரிக்க காத்திருக்கும் பெண்கள் குறிப்பாக , மாதவிடாய் முடிந்து அடுத்த பத்து நாட்களில் ( ஓவுலேஷன் பீரியட் ) இதனை செய்ய கூடாது என்பது குறிப்பிடத்தக்கது


.