Asianet News TamilAsianet News Tamil

தித்திக்கும் பொங்கல் திருநாள் வந்தாச்சு! கும்மி, மஞ்சுவிரட்டு, செங்கரும்பின் மகத்துவம் அறிக...

சூரியனுக்கு நன்றி  சொல்லி பொங்கல் வைப்பது, ஜல்.லிக்கட்டு, உறவுகளைக் காண்பது என கிராமங்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை களைகட்ட  துவக்கியுள்ளது.

Specialty of Pongal Festival
Author
Chennai, First Published Jan 11, 2022, 8:52 AM IST

சூரியனுக்கு நன்றி  சொல்லி பொங்கல் வைப்பது, விவசாயத்துக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி சொல்வது, ஜல்லிக்கட்டு, உறவுகளைக் காண்பது என கிராமங்களில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை களைகட்ட துவங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்று, மஞ்சள், கரும்பு, புதுப்பானை, புதுநெல், வெல்லம், நெய், கும்மி, மஞ்சுவிரட்டு என்று தீராத உணவும் செல்வமும் உங்களின் வாழ்வில் என்று நிறைந்திருக்கட்டும்.  

முதல் நாள் போகிப் பண்டிகை

பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.  இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

பொங்கல் பண்டிகை:

Specialty of Pongal Festival

பொங்கலன்று அதிகாலை எழுந்து வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்குப் புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும், புதிய கரும்பையும், புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். கோலமிட்ட இடத்தில் தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி, கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்'' என்று உரக்கக் கூவுவர். தனது முதற்பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே,  தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது.
 
கரும்பு:

தின்னத் தின்னத் திகட்டாத இனிப்பு பொங்கலுக்கு சிறப்பு கரும்பு பொறுமையாய் சாப்பிட விரும்பு சர்க்கரை வெல்லம் தரும் கரும்பு என்று மண்ணிற்கு சிறப்பு சேர்க்கும் பயிராக இனிப்பு சுவையையும் குளிர்ச்சி தன்மையையும் கொண்ட கரும்பு மருத்துவ குணமிக்கது. அதன் பிறப்பிடம் தென் பசுபிக் தீவுகளாக இருந்தாலும், தமிழ் பாரம்பரியத்தில் ஒன்றுவிட்ட பயிராக இருந்து வருகிறது.

கரும்பு என்றால் இனிப்பு இன்பம் என்று தமிழர்கள் கருதியதால் தான் தித்திக்கும் பொங்கலுக்கு மேலும் தித்திப்பை கூட்ட செங்கரும்பும் சேர்த்துள்ளனர். களர் நிலத்தில் போட்டாலும் உழைப்பின் ஒய்யாரமாய் கட்டுக்கட்டாய் விளைந்து நல்ல மகசூலைக் கொடுத்து விவசாயிகளின் மகிழ்ச்சிக்கு வாழ்த்தும் பயிர் கரும்பாகும்.  

மாட்டுப் பொங்கல்:

Specialty of Pongal Festival

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும். மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவித்து, பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு  வண்ணம் பூசி, கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
  
மஞ்சள் மற்றும் இஞ்சி இன்றி அமையாது பொங்கல்:

Specialty of Pongal Festival

தை திருநாளில் நெற்பயிர் மற்றும் கரும்புக்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கும் நல்வாழ்வு தரும் பொருட்கள் மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகும். தமிழர் மரபில் மஞ்சளை வணங்கிவிட்டுத் தான் பெரும்பாலான நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன.மஞ்சள் நீர் தெளிக்கப்பட்ட களத்தில்தான் சூரிய பொங்கல் வழிபாடு நடக்கும். மஞ்சள் பூசிய புதுப்பானையில்தான் பொங்கல் வைப்பார்கள். ஆண்டு முழுக்கவே செழுமை நீடிக்க வேண்டும் என்பதற்காக, இஞ்சி கிழங்குடன் கூடிய மஞ்சள் செடியை மடித்து, பொங்கல் வைக்கும் முன்னரே பானையின் கழுத்துப் பகுதியில் கட்டிவிடுவார்கள். பிறகு, பச்சரிசி, வெல்லம், நெய் போன்ற உணவுப் பொருள்கள் சேர்த்துத் தயாரிக்கப்படும் சிறந்த உணவான பொங்கலில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் ஏதாவது இருந்தாலும், அதை முறிப்பதற்காகவே அரிசி சேர்க்கும் போதே சிறிதளவு மஞ்சள் துண்டும் அதனுடன் சேர்க்கப்படும்.

இது போன்ற எண்ணிலடங்கா பயன்களை கொண்டுள்ள பொருட்களின் மகத்துவத்தை தன்னிடத்தில் அறிந்து, நம் முன்னோர்கள் அவற்றை பண்டிகைகளுக்குள் புகுத்தி அவற்றின் சிறப்பை நமக்கு சொல்லாமல் சொல்லி வந்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios