Asianet News TamilAsianet News Tamil

குட்நியூஸ்.. இரவில் பெண்கள் தனியாக வர பயமாக இருக்கா? போலீஸார் கார் மூலம் வீட்டில் விட சிறப்பு ஏற்பாடு..!

அனைத்துக் காவல் நிலையங்களில் உள்ள மகளிர் உதவி மையத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி தந்துள்ளது. 

Special arrangement to take women from abroad alone in Pondicherry
Author
Pondicherry, First Published Sep 3, 2021, 8:51 PM IST

புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை வெளியூர்களில் இருந்து தனியாக வரும் பெண்களை பெண் காவலர் உதவியுடன் அவர்களது வீடுகளுக்கே அழைத்து செல்ல ஏற்பாடு புதுச்சேரி அரசு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசுகையில்;- அனைத்துக் காவல் நிலையங்களில் உள்ள மகளிர் உதவி மையத்தை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி தந்துள்ளது. புதுச்சேரியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய முயற்சி அறிமுகமாகிறது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக இருக்கும் பெண்களோ, பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் பெண்களோ, வெளியூரில் இருந்து வந்துள்ள பெண்களோ தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதினால் காவல்துறை கட்டுப்பாட்டு எண் 112க்கு தொடர்பு கொள்ளலாம்.

Special arrangement to take women from abroad alone in Pondicherry

காலதாமதமின்றி ஒரு பெண் காவலரோடு நான்கு சக்கர வாகனத்துடன் சென்று அவர் அளித்த முகவரியில் பாதுகாப்புடன் சேர்ப்பார்கள் என 
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios