உலகில் உள்ள வேர் சொற்களுக்கு தமிழ் மொழி தான் மூலம் என்பதை மொழி ஆராய்ச்சியாளர்கள் பலர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
“ கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்தக்குடி” என்ற புறப்பொருள் வெண்பா பாடல் மூலம் தமிழின் பெருமையை உணர முடியும். ஆம். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் தான். தமிழ் பேசியவர்களே உலகம் முழுவதும் பரவி சென்றனர். ஒரு மொழியில் வேர் சொற்கள் ( Root words) தான் முக்கியமானவை, வேர் சொற்களில் இருந்து தான் மற்ற சொற்கள் உருவாகின்றன. அந்த வகையில் உலகில் உள்ள வேர் சொற்களுக்கு தமிழ் மொழி தான் மூலம் என்பதை மொழி ஆராய்ச்சியாளர்கள் பலர் உறுதிப்படுத்தி உள்ளனர்.
அந்த ஆங்கிலம் மட்டுமின்றி உலகின் பிற மொழிகளிலும் தமிழ் சொற்கள் கலந்துள்ளன. உதாரணமாக திருமண நிச்சயத்தை Betrothal என்று இன்று ஆங்கிலத்தில் சொல்கின்றனர். ஆனால் அது “ பெற்றோர் ஒத்தல்” என்ற தூய தமிழ் வார்த்தை என்பது பலருக்கும் தெரியாது. சமஸ்கிருதம் – தமிழ் மொழிகளுக்கான இடையேயான சண்டை பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உண்மையில், ஆரியர்கள் 4000 ஆண்டுகளுக்கு முன்பு, கைபர் கணவாய் வழியாக இந்தியா வந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால், சிந்து சமவெளி நாகரிகம் கூட, தமிழ் நாகரிகம் தான் என்றும், அந்த நாகரிகத்தை அழித்தவர்களும் ஆரியர்கள் என்ற யூதார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அதே போல சமஸ்கிருதத்தின் மூலம் கூட தமிழ் தான். புத்த துறவிகள், வட இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பிராகிருதம் என்ற தமிழில் இருந்து சிதைந்த மொழியை உருவாக்கி சமஸ்கிருதம் என்ற மொழியை உருவாக்கியதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மௌரிய பேரரசின் முடிவு, புஷ்ய மித்ரன் சுங்கன் என்ற பிராமண அரசனால் ஏற்பட்டது. அதற்கு பிறகே புத்தர்களின் சமஸ்கிருதத்தை ஆரியர்கள் களவாடி கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.
உதாரணமாக அரசன் என்ற வார்த்தை ராசன் ஆகி, வடமொழியில் ராஜா ஆகி இருக்கிறது. அதே போல் அவை என்ற வார்த்தை சபை என்று ஆகி உள்ளது. அரசவை என்பது ராஜ்ய சபா என்று மாறிய பின்னணி இதுதான். எனினும் சமஸ்கிருதம் தமிழை விட பழைய மொழி என்பதே ஆரியர்களின் வாதமாக உள்ளது. ஆனால் தமிழ் 2600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்று கீழடியில் ஆதாரம் கிடைத்துள்ளது. ஆனால் சமஸ்கிருதம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அசோகர் கால கல்வெட்டில் கூட பிராகிருத மொழியே உள்ளது.
W.W. Skeat என்பவர் The Etymological dictionary of the English Language-ல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழில் இருந்து வந்தவை என்று என்று கூறி உள்ளார். உதாரணமாக S சத்தத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் கொண்ட ஆங்கில வார்த்தை வரும்.
உதாரணங்கள்
S + பேசு = Speech
S + பஞ்சு = Sponge
S+ மெது = Smooth
S+ பரவி = Spray
S+ நாகம் = Snake
வேறு சில எடுத்துக்காட்டுகள்
கரை – Cry
களிமண் - Clay
பிளிறு – Blare
பொத்தான் - Button
வணக்கம் – Welcome
சிறுத்தை – Chetah
ஒன்று – One
சட்டென்று – Sudden
எட்டு – Eight
அரிசி – Rice
இது - It
கலாச்சாரம் – Culture
மாங்காய் – Mango
முருங்கை – Moringa
பாதை – Path
வெற்றி – Victory
சர்க்கரை – sugar
தேதி – Date
மாதம் – Month
குளிர் - Cool
ஏடு கற்றோர் – Educator
கயிறு - Coir
காசு - Cash
ஆங்கிலம் மட்டுமல்ல, சீனர்களின் மாண்டரின்மொழிமற்றும்யூதர்களின்ஹிபுரு'வின்தாய்மொழிஅரபி = 65 % தமிழ்மொழிஉள்ளது. " ழ " உச்சரிப்புதமிழ் , மலையாளம் , மண்டரீன்சீனாஆகியமூன்றுமொழிகளில்மட்டுமேஉள்ளது. இன்னும் சொல்லப் போனால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும் தமிழ் மொழியில் இருந்து பிரிந்தவை தான். 1500 வருடங்களுக்குமுன்தெலுங்குஎன்றஒருதனிமொழிஇல்லை. தாய்தமிழகத்தின்ஒருதமிழ்பகுதியேஇன்றையதெலுங்கு மொழி. 'தெள்ளுதமிழ்பாடிதெளிவோனே" என்றுமுருகனைபுகழ்கிறதுதிருப்புகழ்.
1000 வருடங்களுக்குமுன்கன்னடம்என்றஒருதனிமொழிஇல்லை. தமிழ் மொழியின் ஒரு பகுதியே இன்றையகன்னடம். 700 வருடங்களுக்குமுதல்மலையாளம்என்றஒருமொழிஇல்லை. எனவே தமிழ் மொழியின் ஒரு பகுதியேஇன்றையமலையாளம் . அம்மா , அப்பாஎன்றதமிழ்சொல்இன்றுஉலகில்உள்ள 200 மொழிகளில்உள்ளது.
