Asianet News TamilAsianet News Tamil

எளிமையான மக்களை கவரும் ஆவின் பன்னீர்...முதல் பாயாசம் வரை..! புதிதாக அறிமுகம்...குறைந்த விலையில் கிடைக்குமாம்?

எளிமையான மக்களை கவரும் வகையில், பாயாசம் முதல் பால் புரத நூடுல்ஸ், பன்னீர் வரை ஆவினில் புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

New Food products from Aavin
Author
Chennai, First Published Jan 29, 2022, 6:58 AM IST

எளிமையான மக்களை கவரும் வகையில், ஆவினில் புதிதாக தயாரிக்கப்பட்ட, ப்ரிமியம் மில்க் கேக், யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ் மற்றும் டெய்ரி ஒயிட்னர் ஆகிய 5 புதிய பொருட்களை தமிழக அரசால் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அரசின் வழிகாட்டுதலின் பேரில் தற்போது, ஆவின் பன்னீர் விலை உயர்த்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும், மற்ற நிறுவனங்களின் பன்னீர் விலையை காட்டிலும், ஆவின் நிறுவனத்தின் பன்னீர் விலை மிகவும் குறைவுதான் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

New Food products from Aavin

 ஆவின் நிறுவனம் ஏற்கெனவே, பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்களான, தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் போன்ற  பல பொருட்களை குறைந்த விலையில் தயாரித்து விற்று வருகிறது. இதனை தொடர்ந்து, ஆவின் நிறுவனம் புதிதாக ஐந்து பால் சார்ந்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன், பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், எளிய மக்களை கவரும் வகையிலும், ஆவின் உற்பத்தி பொருட்கள் லாபம் ஈட்ட வழிவகை செய்யவும், அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஆவின் நிறுவனம் பல்வேறு புதிய உப பொருட்களை ஆவின் நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் கடந்த வாரம் புதிய ஐந்து பொருட்களை முதல்வர் விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார். அதை தொடர்ந்து, தற்போது ஆவின் பன்னீர் விலை உயர்த்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. 

தமிழக அரசால் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆவின் பொருட்கள்: 

பிரீமியம் மில்க் கேக்:

 ஆவின் நிறுவனம் ஏற்கனவே, குலாப்ஜாமுன், பால்கோவா, மைசூர்பா, மற்றும் ரசகுல்லா போன்ற இனிப்பு பொருட்களை நுகர்வோர்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இனிப்பு பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரீமியம் மில்க் கேக் தயாரித்து 250 கிராம் ரூ.100/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த இனிப்பு வகை தரம் மிகுந்த பால் பவுடர் மற்றும் ஆவின் அக்மார்க் நெய் உபயோகித்து தயாரிக்கப்பட்டுள்ளது.

யோகர்ட் பானம் (மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில்): 

இளைஞர்களை கவரும் வகையில் யோகர்ட் பானம் மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி சுவையில் தயாரிக்கப்பட்டு 200 மி.லி. அளவு கொண்ட பாட்டில் ரூ.25/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பானம் உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஜீரண சக்தி மேம்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாயாசம் மிக்ஸ்: 

இந்த புதிய பாயாசம் மிக்ஸ் குழந்தைகளை கவரும் வகையில் மிகுந்த சுவையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.  இவை பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் எளிமையாக பாயாசம் தயாரிக்கும் வகையில் பாயாசம் மிக்ஸ் 100 கிராம் ரூ.50/- மற்றும் 200 கிராம் ரூ.100/- என்ற அளவில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.  மேலும், இப்பாயசம் மிக்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பாதம், முந்திரி, திராட்சை மற்றும் பால்பவுடர் ஆகிய பொருட்களை கொண்டு சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பால் புரத நூடுல்ஸ்: 

 வேலைக்கு செல்லும் பெண்களை தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும் குழந்தைகள் விரும்பி சுவைக்கக்கூடிய பால் புரத சத்து மிகுந்த நூடுல்ஸ் 70 கிராம் ரூ. 10/- என்ற விலையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ஆவின் டெய்ரி ஒய்ட்னர்: 

அவசர பால் தேவைக்கு உடனடியாக தயாரிக்கும் வகையிலும், உணவகங்கள், தேநீர் கடைகள், விடுதிகள் மற்றும் பெரிய நிறுவனங்களின் தேவையினை கருத்தில் கொண்டும் பயணங்களின் போது எளிதாக எடுத்து செல்லக்கூடிய டெய்ரி ஒய்ட்னர் புத்தம் புது வடிவில், 20 கிராம் ரூ.10/-, 200 கிராம் ரூ.80/- மற்றும் 500 கிராம் ரூ.200/- என்ற விலையில் ஆவின் டெய்ரி ஒய்ட்னர் அறிமுகப்படுத்தப்படுகிறது.

New Food products from Aavin

ஆவின் பன்னீர்: 

ஆவின் பன்னீர், கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை, 200 கிராம் பன்னீர் பாக்கெட் 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது, 15 ரூபாய் வரை உயர்த்தி 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 15 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதால் ஆவின் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், மற்ற நிறுவனங்களின் பன்னீர் விலையை காட்டிலும், ஆவின் நிறுவனத்தின் பன்னீர் விலை மிகவும் குறைவுதான் என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பல ஆண்டுகளாக பால் உற்பத்தியில் நீடித்து வரும் ஆவின் நிறுவனம்,  ஆவின் கூட்டுறவு சங்கங்கள்  மூலம் கிராமம், மாவட்டம் மற்றும் மாநிலத்தில் வாழும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள்   கொண்டு நாள்தோறும் நுகர்வோருக்கு 25 லட்சம் லிட்டர் பாலை தமிழ்நாடு முழுவதும் விற்கிறது. இதில், சென்னையில் மட்டும் 13 லட்சம் பால் விற்பனை செய்கிறது.

இதோடு மட்டும் அல்லாமல் பால் மற்றும் பால் சார்ந்த இனிப்பு பொருள்களையும் விற்று வந்த நிலையில், ஆவின் நிறுவனத்தின் இந்த புதிய பொருட்களின் அறிமுகம் மக்களிடையே வரவேற்பை பெரும் என்று நம்பப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios