Monsoon Tips: இனி மழைக்காலத்தில் ஆடைகளை உலர்த்த மின்விசிறி தேவை இல்லை; பூண்டு போதும்!!
மழைக்காலத்தில் பூண்டைக் கொண்டு துணிகளை உலர்த்துவது எப்படி என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

பருவமழை தொடங்கும் போது, துணிகளை உலர்த்துவதுதான் மிகப்பெரிய பிரச்னை. ஈரமான மற்றும் துவைத்த துணிகளை வெளியில் உலர வைக்க முடியாது. உடைகளை வீட்டுக்குள் காயவைத்தாலும் அவை சீக்கிரம் உலருவதில்லை. பல நாட்கள் ஈரமாகவே இருக்கும். ஆனால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. மழைகாலத்தில் துணிகளை உலர்த்துவது எவ்வாறு என்று இங்கு பார்க்கலாம்.
பொதுவாக, நாம் மழையில் துணிகளை உலர்த்துவதற்கு மின்விசிறியைப் பயன்படுத்துவோம். வீட்டில் உள்ள ஸ்டாண்டில் துணிகளை வைத்து மின்விசிறியின் காற்றில் காயவைக்கிறார். ஆனால் விசிறி இல்லாமல் கூட துணிகளை உலர வைக்கலாம், அதுவும் பூண்டு உதவியுடன். பூண்டைக் கொண்டு துணிகளை உலர்த்துவது எப்படி என்று இப்போது நீங்கள் யோசிக்கலாம். வாங்க இதுகுறித்து பார்ப்போம்.
இதையும் படிங்க: Monsoon Health Tips: மழைக்காலம் வந்தாச்சி; ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ் இதோ..!!
இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், பூண்டு தோல்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் சூடாக்கவும். இப்போது சற்று ஈரமான ஒரு துணியை எடுத்து தரையில் விரித்து அதன் மீது பூண்டு தோல்களை பரப்பவும். அதன் மேல் மற்றொரு துணியை வைத்து அதன் மேல் தோலை பரப்பவும். சொல்லப்போனால் அனைத்து ஆடைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து, அதன் மீது பூண்டு தோல்களை பரப்பவும். பிரியாணி செய்யும் போது எப்படி அடுக்கி வைக்கிறோமோ, அதே போல் இங்கும் செய்ய வேண்டும். பூண்டின் சூடான தலாம் ஆடைகளில் உள்ள ஈரப்பதத்தை இழுக்கிறது. எனவே, மழைக்காலத்தில் ஈரமான ஆடைகள் கூட பூண்டைக் கொண்டு சரியாக உலர்த்தலாம்.