சென்னை கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

முந்துங்கள் இளைஞர்களே! 1000 கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு..! 21 ஆம் தேதி மாபெரும் முகாம்..! 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். இந்த நிலையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வே.வி‌‌ஷ்ணு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார் 

அதில் 

இதன் மூலம் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். தற்போது சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வருகிற 21-ந்தேதியான வெள்ளிக்கிழமை அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் 8 ஆம் வகுப்பு 10 ஆம் வகுப்பு 12 அம்மா வகுப்பு, ஐ டிஐ, டிப்ளமோ மற்றும் ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம். மாற்றுத்திறனாளிகள் கூட கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில் 15 கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துக்கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணி இடங்களை நிரப்ப உள்ளனர். இந்த முகாமில் கலந்துகொள்ள வயதுவரம்பு 35 க்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது