பொங்கலுக்கு " பொங்கல் வைப்பது எப்படி "..? வாங்க பார்க்கலாம் ......!
பால் பொங்கல்
பொங்கல் திருநாளுக்கு , சர்க்கரை பொங்கல் வெல்லம் பொங்கல் என சுவையூட்டும் பொங்கலை வைத்து கொண்டாடுவர் . நாளை மறுநாள் பொங்கல் தினம் வரும் நிலையில் வெள்ளைப்பொங்கல் மற்றும் பால் பொங்கல் எப்படி வைப்பது என பார்க்கலாம் .
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
பால் - முக்கால் கப்
தண்ணீர் - இரண்டரை அல்லது 3 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பால் மற்றும் தண்ணீரை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும். அரிசியைக் கழுவி பாலோடு சேர்த்து வேகவிடவும். தீயை மிதமாக்கவும். அரிசி நன்கு மிருதுவாக வெந்ததும், கரண்டியால் நன்கு மசித்துவிடவும். இந்தப் பதத்தில் உப்பைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். இல்லையென்றால் அடி பிடித்துவிடும். பிறகு பரிமாறினால் சுவை அள்ளும்.
கல்கண்டு பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை + கல்கண்டு - முக்கால் கப்
நெய்/வெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ச்சிய பால் - கால் கப்
ஏலக்காய் - 1 (பவுடராக்கவும்)
உலர்திராட்சை (கிஸ்மிஸ்) - 1 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்)
முந்திரி - 5
பச்சைக் கற்பூரம் - கடுகளவு
குங்குமப்பூ - 5 நரம்பு
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
சர்க்கரை மற்றும் கல்கண்டைப் பொடித்து தனியாக வைக்கவும். பொங்கலைச் சுவைக்கும்போது கல்கண்டை சுவைப்பது சிலருக்குப் பிடிக்காது. பிடிப்பவர்கள் முழுதாகவே கல்கண்டை சேர்க்கலாம். குங்குமப்பூவை சிறிது பாலில் ஊற விடவும்.
குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்/வெண்ணெய் விட்டு பாசிப்பருப்பைச் சேர்த்து வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு, குக்கரில் அரிசியோடு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடிப்போட்டு 4 விசில் வரை வேகவிட்டு, நன்கு மசித்து வைக்கவும்.
இத்துடன் பால் சேர்த்து வேகவிட்டுப் பொடித்த சர்க்கரை-கல்கண்டு கலவை, பச்சைக் கற்பூரம், உப்பு, பாலில் ஊறிய குங்குமப்பூ சேர்த்து கிளறவும். தேவையான அளவு நெய்விட்டு மிதமான தீயில் 8 நிமிடம் கிளறவும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரி, உலர்திராட்சை சேர்க்கவும்