Asianet News TamilAsianet News Tamil

இந்த பொருளை வீட்டில் வைத்துபாருங்கள்...பணக்காரனாகும் அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்..!

fortune thing
fortune thing
Author
First Published Aug 12, 2017, 2:38 PM IST


வாழ்கையில்  எப்படியாவது முன்னுக்கு வரவேண்டும் என  இரவும் பகலும் உழைக்கும்  உழைப்பாளிகள் எப்பொழுதும் உழைத்துக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.

ஒரு சிலர்  எவ்வளவு பாடுபட்டும் மயிரிழையில் வாய்ப்பு தவற விடுவார்கள்.இதனால் வாழ்கையில்  சோகம் கொஞ்சம் காணப்படும். மன அழுத்தம் கூட வரும். தாம் வைத்திருந்த  செல்வதை கூடஇழக்க  நேரிடும்.

இது போன்ற சமயத்தில் தான்  கோவில் குளம் என பல இடத்திற்கு செல்ல தோன்றும். அப்படிபட்ட  நிலைமையில் நீங்கள் வலம்புரி சங்கை வாங்கி வீட்டில்  வைத்து பாருங்கள்  இழந்ததை  மீண்டும் பெறுவீர்கள், வாங்கிய  கடனெல்லாம்  முடிந்து,  நீங்களே மற்றவர்களுக்கு கடன்  கொடுக்கும் நிலைமை  உருவாகும்  என்பது  ஐதீகம்

வலம்புரி சங்கை எப்படி வைத்து  பூஜிக்க வேண்டும் தெரியுமா?

நாம் தொழில் செய்யும் இடங்களில் வலம்புரி  சங்கை வைக்கலாம்

இதனை சுத்தமாக வைத்து தினமும் பூஜை செய்து வர வேண்டும்

சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற ஆன்மீக சிறப்பு நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால் கணவன் – மனைவி நல்லஆயுளுடன்,மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை கழிப்பார்கலாம்.

மேலும், எந்த எதிர்மறை எண்ணங்களும் நம்வீட்டை அண்டாமல் இருக்க வலம்புரி சங்கை வீட்டில்  வைத்துக்கொள்ளலாம்

மேலும் பில்லி சூன்யம் எதுவும் குடும்ப நபர்களை பாதிக்காதாம்  

Follow Us:
Download App:
  • android
  • ios