Asianet News TamilAsianet News Tamil

யூனிபார்மில்..மக்கள் காலை தொட்டு தொட்டு கும்பிடும் டி.எஸ்.பி ..! வெளிவந்த பகீர் வீடியோ...!

பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒத்துழைக்க கூடாது என கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் விவசாயிகள். 

dsp touched people feet to leave protest in andra
Author
Andhra Pradesh, First Published Jan 4, 2020, 5:35 PM IST

யூனிபார்மில்..மக்கள் காலை தொட்டு தொட்டு கும்பிடும் டி.எஸ்.பி ..!  வெளிவந்த பகீர் வீடியோ...! 

ஆந்திராவில் அமராவதியை தலைநகராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து நடத்திய போராட்டத்தில் பெண்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

அப்போது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கு ஒத்துழைக்க கூடாது என கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் விவசாயிகள். மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள பொலிஸாருக்கு  குடிக்க தண்ணீர் கூட கொடுக்க கூடாது என கிராம மக்கள் முடிவு  செய்தனர். 

dsp touched people feet to leave protest in andra

இந்த நிலையில் நிலைமைசற்று மோசமானதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டங்களை கட்டுப்படுத்த பொதுமக்களிடம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறி காவல்துறை அதிகாரி டி.எஸ்.பி தான் சீருடை அணிந்து இருப்பதையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் கால்களை தொட்டு வணங்கி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

இந்த தருணத்தில் மக்களும் நிலைமையை சமாளிக்க ஏன் சார் இப்படிபண்றீங்க என விலகி விலகி செல்லும் வீடியோ காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios