2 பேருந்து இடையில் சிக்கி கைக்குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி.. ஈரக்குலையை நடுங்க வைக்கும் காட்சிகள்.!
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு அரசு பேருந்தும் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக 2 பேருந்துகளுக்கு இடையில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி சிக்கிக் கொண்டனர். இந்த இரண்டு ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுச்சேரி அருகே இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கி கைக்குழந்தையுடன் தம்பதி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிரே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஒரு அரசு பேருந்தும் வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக 2 பேருந்துகளுக்கு இடையில் கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி சிக்கிக் கொண்டனர். இந்த இரண்டு ஓட்டுநர்களின் சாமர்த்தியத்தால் 3 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனை இரு பேருந்துகளில் இருந்து பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து பேருந்துகளில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.