ஹிரோஷிமாவில் நடைபெற உள்ள ஜி7 உச்சிமாநாட்டில், "உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல்கள் மற்றும் கவலைகளை எடுத்துரைப்பேன்" என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.

பிரதமர் மோடி இன்று ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமாவுக்கு சென்றுள்ளார். ஜி-7 நாடுகளில் இந்தியா உறுப்பினராக இல்லை என்றாலும், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று பிரதமர் மோடி ஜப்பான சென்றுள்ளார். ஜப்பான் செல்வதற்கு முன் Nikkei Asia என்ற செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற உள்ள ஜி7 நாடுகளின் மாநாட்டில் ஆற்றல், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் விநியோகச் சங்கிலிகள் போன்ற துறைகளில் உலகளாவிய மாற்றங்கள் மற்றும் சவால்களைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். இந்த சவால்களை எதிர்கொள்வதில் நம்பகமான பங்காளியாக இந்தியாவின் பங்கை நான் வலியுறுத்துவேன். இந்தியாவின் அனுபவம் "கூட்டத்தில் வலுவாக எதிரொலிக்கும்" என்றுரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் பேசிய அவர் "எங்கள் அரசியல், மூலோபாய, பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களில் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பை நாங்கள் இப்போது காண்கிறோம். இது ஓரளவு எழுத்துப்பூர்வமாகவும், ஓரளவு நேரிலும் நடத்தப்பட்டது.” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : 3 நாடுகள்! 6 நாள்! மொத்தம் 40 நிகழ்ச்சிகள் - பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம்

இந்தியா ஒரு மத்தியஸ்த பாத்திரத்தை வகிக்க முடியுமா என்று கேட்கப்பட்டதற்கு, பதிலளித்த மோடி, உக்ரைன் மோதலில் தனது நாட்டின் நிலைப்பாடு "தெளிவானது மற்றும் அசைக்க முடியாததாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் “ இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. அதில் உறுதியாக இருக்கும். அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், குறிப்பாக உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில். நாங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்பைப் பேணுகிறோம். ஒத்துழைப்பு தான் நமது நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் மோதல்கள் அல்ல” என்று தெரிவித்தார். 

மேலும் "குளோபல் சவுத்தின் உறுப்பினராக, எந்தவொரு பன்முக அமைப்பிலும் இந்தியா, பல்வேறு குரல்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படு்ம், ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான நிகழ்ச்சி நிரலுக்கு நாங்கள் பங்களிப்போம். காலநிலை மாற்றம், கோவிட்-19 தொற்றுநோய், பயங்கரவாதம் மற்றும் நிதி நெருக்கடிகள் போன்ற சமகால சவால்களை எதிர்கொள்வதில் இந்த குறைபாடுகள் தெளிவாகியுள்ளன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற முழு கண்டங்களுக்கும் நிரந்தர அடிப்படையில் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்து மறுத்தால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நம்பகத்தன்மை மற்றும் அதன் முடிவெடுக்கும் செயல்முறை எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்படும்." என்று தெரிவித்தார்.

அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு குறித்தும் மோடி பேசினார். இதுகுறித்து பேசிய அவர் "இந்தியா தனது இறையாண்மை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க முழுமையாக தயாராக உள்ளது, உறுதியுடன் உள்ளது. இந்தியா-சீனா உறவின் எதிர்கால வளர்ச்சி பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க முடியும். உறவுகளை எளிமையாக்குவது பரந்த பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பயனளிக்கும். இந்தியா, அண்டை நாடுகளுடன் சாதாரண உறவுகளை விரும்புகிறது

இருப்பினும், பயங்கரவாதம் மற்றும் பகைமை இல்லாத ஒரு சாதகமான சூழலை உருவாக்குவது அவர்களின் கடமையாகும். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது." என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி "2014 இல் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த நாம் இப்போது உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளதால், நமது முன்னேற்றம் தெளிவாகத் தெரிகிறது. உலகளாவிய நிலை சவால்களை ஏற்படுத்தினாலும் சமீபத்திய ஆண்டுகளில் நாங்கள் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம், இது எங்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எனது அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா: அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயனுக்கு அழைப்பு இல்லை - ஏன்?