Asianet News TamilAsianet News Tamil

காஷ்மீரில் புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ள காட்டுப் பன்றிகள்.. பீதியில் மக்கள்.. அதிகாரிகள் என்ன சொல்கின்றனர்?

காட்டுப்பன்றிகள் உரி எல்லை வழியாக காஷ்மீருக்குள் நுழைந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Wild boars have become a new threat in Kashmir.. What officials say?
Author
First Published Jun 5, 2023, 6:57 PM IST

ஜம்மு காஷ்மீர் தலைநர் ஸ்ரீநகரில் இருந்து வடமேற்கே 40 கி.மீ தொலைவில் உள்ள ஹாஜின் என்ற கிராமத்தில் ஆப்பிள் மரங்கள் மற்றும் பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டம் அழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான சமூக வலைதளில் வெளியான் நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காட்டுப் பன்றிகள் விலங்குகள் மரங்களை சேதப்படுத்தியதுடன், அவற்றை அழித்துள்ளன. மேலும் கிராமத்தில் தனது பண்ணையை கவனித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணையும் காட்டுப்பன்றிகள் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஓய்வுபெற்ற வனவிலங்கு அதிகாரியான சையத் முஷ்டாக் அகமது பர்சா, இதுகுறித்து பேசிய போது  "இது நம்பமுடியாதது. காஷ்மீர் விலங்குகளுக்கு இயற்கையான வசிப்பிடமாக இல்லாதபோது இது திடீரென்று நடக்காது. இதுபோன்ற இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் மனித தலையீட்டால் மட்டுமே நிகழும், இயற்கையாக நிகழும் நிகழ்வுகள் அல்ல. மனிதர்களே காட்டுப்பன்றிகளை இந்த பகுதிகளில் நுழைய விட்டிருக்க வேண்டும். ஆனால் யார், எங்கிருந்து இதனை செய்தார்கள் என்பது தெரியவில்லை.” என்று தெரிவித்தார். 

காட்டுப்பன்றிகள் உரி எல்லை வழியாக காஷ்மீருக்குள் நுழைந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்த காட்டுப்பன்றிகள் வேண்டுமென்றே கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பால் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. காட்டுப்பன்றிகளும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் காடுகளில் இயற்கையாக வசிப்பதில்லை என்று வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பிரிக்கும் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி காஷ்மீரின் வடக்குப் பகுதிக்கு காட்டுப் பன்றி வந்ததாக வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் குழு தயாரித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் மக்கள்தொகை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாகவும், உணவு மற்றும் உயிர்வாழ்வதற்காக இவை இந்தியாவிற்குள் தள்ளப்பட்டு அல்லது தாங்களாகவே வந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீப வருடங்களில் காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது என்று பந்திபோராவின் துணை ஆணையர் டாக்டர் ஓவைஸ் அகமது தெரிவித்தார். மேலும் பேசிய அவர் "இப்போதே நாங்கள் இந்த விலங்கை எவ்வாறு வளைகுடாவில் வைத்திருப்பது என்பது குறித்து கிராமவாசிகளுக்குக் கல்வி கற்பித்து வருகிறோம், மேலும் நீண்ட கால திட்டங்களிலும் பணியாற்றி வருகிறோம்." என்று தெரிவித்தார்.

காஷ்மீரின் உரி லிம்பர், லாச்சிபோரா, பல்வார், சும்பல் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களிலும், நெற்பயிர்களிலும் உள்ள மரங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின. இவை பொதுவாக இரவில் வந்து வயல்களை சேதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

காட்டுப்பன்றி காஷ்மீரில் இயற்கையாக வசிப்பதல்ல, 19- நூற்றாண்டின் நடுப்பகுதியில் டச்சிகம் வனவிலங்கு சரணாலயத்தில் விளையாட்டிற்காக அவை பயன்படுத்தப்பட்டது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அதன் உயிர்வாழ்வதற்கான சிறந்த சூழ்நிலைகள் இல்லாததால், காட்டுப் பன்றிகள் அழிந்து வருகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 1984 ஆம் ஆண்டின் வனவிலங்கு கணக்கெடுப்பின்படி, காஷீர் பள்ளத்தாக்கில் காட்டுப்பன்றியை ஒருமுறை கூட மக்கள் பார்த்ததில்லை.

இருப்பினும், ஒரு தசாப்தத்திற்கு முன்பு தச்சிம் தேசிய பூங்காவில் ஒரு வித்தியாசமான விலங்கு காணப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வடக்கு காஷ்மீரில் அவர்கள் பார்த்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

பிராந்தியத்தின் வனவிலங்கு காப்பாளர் ரஷித் யாஹ்யா நகாஷ் இதுகுறித்து பேசிய போது “ காடுகளை ஒட்டிய பகுதிகளுக்கு மட்டுமே இந்த விலங்கு காணப்படுகிறது. ஆனால் இந்த விலங்கு இப்போது அடிக்கடி மனித நிலப்பரப்புகளை நெருங்கி வருகிறது, குறிப்பாக வடக்கு காஷ்மீரில், நிற்கும் பயிர்கள் சேதமடைவதாக  எங்களுக்கு அடிக்கடி தகவல் கிடைத்து வருகிறது” என்று தெரிவித்தார். 

காஷ்மீரில் காட்டுப்பன்றிகளின் மறுமலர்ச்சியை காலநிலை மாற்றம் எவ்வாறு பாதித்தது என்பதை நிரூபிக்க விரிவான ஆய்வு தேவை என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் காஷ்மீருக்குள் நுழைந்துள்ள் காட்டுப்பன்றிகளை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த இயலாமைக்கு 370 வது பிரிவை ரத்து செய்தது ஒரு முக்கிய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios