Asianet News TamilAsianet News Tamil

டூ வீலரெல்லாம் தூக்கி ஓரங்கட்டுங்க !! இன்றைக்கு பெட்ரோல் விலையை கேட்டா கண்ணீர் வடிப்பீங்க…

பெட்ரோல் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி டூ வீலர்களை ஓரம் கட்டிவிட்டு சைக்கிளிலேயே பயணம் செய்யலாம் என்ற நிலை வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் திண்டாட்டத்தில் சிக்கியுள்ளனர்.

Very high hike in petrol and deisel price today
Author
Chennai, First Published Aug 30, 2018, 10:46 AM IST

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதிகாரம் அளித்தது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இங்கு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

Very high hike in petrol and deisel price today

தொடக்கத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நாள் தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவதாலும், அமெரிக்க டாலர்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்று தொடர்ந்து 5–வது நாளாக விலை அதிகரித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து ரூ.81.35 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் அதிகரித்து 73.88 ஆகவும் உள்ளது. 

Very high hike in petrol and deisel price today

டீசல் விலை விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருவது வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசல் விலை அதிகரிப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ? என பொதுமக்கள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

Very high hike in petrol and deisel price today

பெட்ரோல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தங்களது வாகனங்களை ஓரம்கட்டிவிட்டு அலுவலகங்களுக்கு சைக்கிளில் செல்லலாமா ? என யோசிக்க வைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios