இந்த வித்தியாசமான திருமணம் ஜான்சியின் படகான் கேட் வெளியே அமைந்துள்ள பிரம்மகுமாரி ஆசிரமத்தில் நடந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசிக்கும் 27 வயதான கோல்டி ரைக்வார், சிவபெருமானை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தின் போது சிவபெருமானின் திருவுருவ சிலையும் தேரில் ஏந்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. விழாவிற்கு வந்த மக்களுக்கு திருமண விருந்தும் வழங்கப்பட்டது. இந்த வித்தியாசமான திருமணம் ஜான்சியின் படகான் கேட் வெளியே அமைந்துள்ள பிரம்மகுமாரி ஆசிரமத்தில் நடந்தது.

அன்னபூர்ணா காலனியில் வசிப்பவரும், பாபினாவில் உள்ள துணை போஸ்ட் மாஸ்டர் பல்ராம் ராய்க்வாரின் மகளுமான கோல்டி ராய்க்வார் (27), பி.காம் தேர்ச்சி பெற்றவர். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அமைந்துள்ள பிரம்மகுமாரி விடுதியில் தங்கியிருந்தபோது நவீன கல்வியுடன் ஆன்மீகக் கல்வியையும் பெற்றார். அதற்கு பின்னர், ஜான்சிக்குத் திரும்பிய பிறகு, பாரகானில் கட்டப்பட்ட பிரஜாபிதா பிரம்மகுமாரி ஈஸ்வரிய விஸ்வவித்யாலயாவில் கோல்டி கடவுளின் சேவையில் ஈடுபட்டார்.

மீராபாய் கிருஷ்ணரை தன் கணவனாக ஏற்றுக்கொண்டது போல், தானு சிவபெருமானை திருமணம் செய்து கணவனாக ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் “ பொதுவாக எனக்கு சிறுவயதில் இருந்தே சிவபெருமானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நான் சிவபெருமானை மணந்து அவரை என் துணைவியாக்கிக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை எப்போதும் அவர் ஆதரிக்கிறார்.” என்று தெரிவித்தார். 

இரண்டு நாட்களுக்கு முன், பிரம்மகுமாரி ஆசிரம சகோதரிகளிடம், சிவபெருமானை திருமணம் செய்து கொள்ளும் யோசனையை கூறி, அனைவரின் சம்மதத்துடன் விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கின. திருமணப் பத்திரிகைகள் அச்சிடப்பட்டன. திருமண ஊர்வலம் புறப்பட்டது. விருந்தினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. படகோன் கேட் வெளியே அமைந்துள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமணம் நடைபெற்றது.

Girl got Married to Lord Shiva | மேளதாள ஊர்வலத்துடன் சிவனை திருமணம் செய்து கொண்ட பெண்!

தேரின் மேல் சிவலிங்க வடிவில் திருவுருவம் கொண்டு வரப்பட்டு சீர்வரிசை கட்டி பெண்கள் துவாராசர அர்ச்சனை செய்தனர். இதற்குப் பிறகு, ஜெயமாலாவின் நிகழ்ச்சியும் நடந்தது.

35 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த மகன்.. வெள்ள மீட்புப் பணியின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..