Asianet News TamilAsianet News Tamil

என் அக்கவுண்ட்ல 2,700 கோடியா.. செங்கல் சூலை தொழிலாளருக்கு அடிச்ச லக்.. கடைசியில் பாவம்யா ?

உ.பியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது ஜன்தன் கணக்கில் ரூ.2,700 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

UP labourer goes to withdraw Rs 100 finds Rs 2700 crore in bank account
Author
First Published Aug 3, 2022, 5:18 PM IST

உத்திரப்பிரதேச மாநிலம், கமல்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பிஹாரி லால். 45 வயதாகும் இவர், சமீபத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து 100 ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். பணத்தை எடுத்ததும் வழக்கம் போல, அக்கவுண்டில் உள்ள மீதி பணம் தொடர்பாக மெசேஜ் ஒன்றும் பிஹாரியின் மொபைல் போனுக்கு வந்துள்ளது.

UP labourer goes to withdraw Rs 100 finds Rs 2700 crore in bank account

வங்கியில் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில் அவர் தனது கணக்கில் ரூ.2,700 கோடிக்கு மேல் பணம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்  பிஹாரி. அவரது கணக்கில் ரூ.27,07,85,13,985 வரவு வைக்கப்பட்டதாக கிளை நடத்துநர் லாலிடம் தெரிவித்தார்.  பிஹாரி லால் ராஜஸ்தானில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து ஒரு நாளைக்கு 600 முதல் 800 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு..தேதி குறித்த நீதிமன்றம்.. அதிமுக பொதுக்குழு செல்லுமா ? பரபரப்பில் இபிஎஸ் Vs ஓபிஎஸ் !

பருவமழை காரணமாக செங்கல் சூளை யூனிட் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பினார். இதுகுறித்து பேசிய பிஹாரி லால், ‘என்னுடைய வங்கி கணக்கில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று யோசித்தேன். அதனால் மீண்டும் கணக்கை சரிபார்த்தேன். எனது கணக்கில் ரூ. 2,700 கோடி கிடப்பதை நான் பார்த்தேன் என்று கூறியுள்ளார். பிஹாரி லாலின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 

UP labourer goes to withdraw Rs 100 finds Rs 2700 crore in bank account

பிறகு அருகிலுள்ள கிளையில் தனது கணக்கைச் சரிபார்த்தபோது, ​​​​பாக்கி ரூ.126 மட்டுமே இருந்தது. இதுகுறித்து மாவட்ட மேலாளர் அபிஷேக் சின்ஹா ​​கூறும்போது, சம்பந்தப்பட்ட கணக்கில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ரூ. 126 மட்டுமே இருந்தது. இது வங்கி பிழையாக இருக்கலாம். மேலும் இந்த விஷயம் மூத்த வங்கிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அடித்து சொல்லும் கர்நாடக ஆசிரமத்தின் ஐதீகம் - ஒர்க்அவுட் ஆகுமா ?

Follow Us:
Download App:
  • android
  • ios