மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திமுகவின் ஆர்.எஸ் பாரதி சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்தில் ராஜ்பவன் மீதான தாக்குதல்,ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள் நடத்திய அநாகரீகமான பேச்சுகளின் விளைவுதான். ஆனாலும் திமுக பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நமது வடகிழக்கு சகோதர சகோதரிகளின் பெருமையை நாய் உண்பவர்களாக மாற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. முதலமைச்சரின் பாட்காஸ்ட் நாடகம் தொடர்கிறது. இது இந்தியா கூட்டணி மற்றும் உள்ளடக்கிய சமூக நீதிக்கான அவர்களின் மாதிரி ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அண்ணாமலை பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதில், “மற்றொரு துஷ்பிரயோகம் ராகுல் காந்தியின் இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கம் திமுக செய்துள்ளது. முதலில் சனாதன இந்துக்களை டெங்கு வைரஸ் என்று தாக்கி பேசினார்கள். இப்போது நாகாக்களை நாய் உண்பவர்கள் என்று பேசியுள்ளார்கள்.

Scroll to load tweet…

வியாழன் எஸ்கேப் வேலாசிட்டி, உருளைக்கிழங்கு தங்கம், இவிஎம்கள், ஜனநாயகம் என அனைத்திலும் கருத்துள்ள ராகுல் காந்தி இதைப் பற்றி வாய் திறக்க முடியாது. என் நாகா நண்பர்களிடம், தயவு செய்து திமுகவில் இருப்பவர்களை புறக்கணிக்கவும். ஸ்டாலினின் பலிபீடத்தில் கடவுளாக வணங்கும் அறியாத ஊழல் ஜோக்கர்கள் என்றுதான் சொல்ல முடியும்” என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..