சூரிய நமஸ்காரத்தின் போது ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூரிய நமஸ்காரத்தின் போது ஆசிரியையின் இதயம் செயலிழந்து, மூக்கில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் சுவாசம் நின்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் யோகா செய்து கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஷங்கர்காட் பகுதியில் வசிக்கும் ஓம் பிரகாஷ் திரிபாதி என்பவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாலகாட்டைச் சேர்ந்தவர். அவர் வழக்கம் போல் பிரயாக்ராஜ், டெல்லியர்கஞ்சில் உள்ள கர்சன் பாலத்தின் மேல் தனது நண்பர்களுடன் யோகா செய்து கொண்டிருந்தார்.

திரிபாதி சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்து ரத்தம் கொட்டி உயிரிழந்தார். உ.பி.யின் கல்வித் துறையில் ஆசிரியராக நியமிக்கப்பட்ட திரிபாதி, சர்க்கரை நோயாளி. இதன் காரணமாக அவர் தனது உடல்நிலை குறித்து மிகவும் கவனமாக இருந்தார். தொடர்ந்து யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டவர். 

இதையும் படிங்க..ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ

அவர் தனது நண்பர்களுக்கு யோகாவைப் பற்றி விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் அளித்தார். அவரது நண்பர் வழக்கறிஞர் கியான் பகதூர் கருத்துப்படி, திரிபாதி, ஷிவ் பகதூர் மவுரியா மற்றும் அவர்களும் கர்ஜன் பாலத்தில் யோகா செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கீழே விழுந்தனர்.

இதே போன்ற மற்றொரு சம்பவம் அண்மையில் நடைபெற்றது. மார்ச் 12 அன்று, மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் மார்ச் 12ஆம் தேதி ரங்கபஞ்சமியை முன்னிட்டு மகாகாலேஷ்வர் கோயிலில் இருந்து ஊர்வலம் சென்றபோது சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!

இதையும் படிங்க..அடக்குமுறையின் உச்சத்தில் பெரியார் பல்கலை.. 5 மாணவிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்