Asianet News TamilAsianet News Tamil

ராணுவ வீரரின் அதிர்ச்சி செயல்..! பின்னணி என்ன? 

The shock of the soldier
The shock of the soldier
Author
First Published Sep 25, 2017, 12:00 PM IST


பீகார் மாநிலம் தன்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர், சக வீரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்நிய நாட்டு ராணுவத்துடனும் தீவிரவாதிகளுடனும் சண்டையிட்டு நாட்டை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் ராணுவத்தினர்.

அத்துமீறி தாக்குதல் நடத்தும் அண்டை நாட்டு ராணுவத்துடனும் தீவிரவாதிகளுடனும் சண்டையிட்டு பல வீரர்கள் வீர மரணம் அடைவர்.

ஆனால் பீகார் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு ராணுவ வீரர்களின் மரணம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் தன்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர், சக வீரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios