MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • School Holiday: கொட்டும் கனமழை.. 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?

School Holiday: கொட்டும் கனமழை.. 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா?

School Holiday: கனமழை காரணமாக 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது? தொடர்ந்து பெய்யும் மழையால் நிலைமை எப்படி உள்ளது? முழு பட்டியலையும் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 03 2026, 05:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
Image Credit : stockPhoto

12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கேரளா முழுவதும் பெய்துவரும் கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இடைவிடாத மழையால் ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த மழை விபத்துகளில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர், 10 பேரைக் காணவில்லை. நிலைமை மோசமாக இருப்பதால், மாநில அரசு ஹை அலெர்ட் அறிவித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி, அதிகாரிகள் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடல்
Image Credit : Asianet News

12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

மழை குறையாததால், காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட ஆட்சியர்கள் திங்கள்கிழமை விடுமுறை அறிவித்துள்ளனர். 

அங்கன்வாடிகள், மதரஸாக்கள், ட்யூஷன் சென்டர்களுக்கும் விடுமுறை. ஆனால், முன்பே திட்டமிட்ட பல்கலைக்கழக மற்றும் பொதுத் தேர்வுகள் வழக்கம் போல் நடக்கும். கோழிக்கோட்டில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம். ஆலப்புழாவில் நிவாரண முகாம்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

Related Articles

Related image1
Fake Rice: உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!
Related image2
Income Tax Notice: வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
35
உயிரிழப்பு 15 ஆக உயர்வு.. தேடுதல் பணிகள் தீவிரம்
Image Credit : Asianet News

உயிரிழப்பு 15 ஆக உயர்வு.. தேடுதல் பணிகள் தீவிரம்

மாநிலத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் வி.டி. சதீசன் தெரிவித்துள்ளார். கோட்டயத்தில் மூவர், மலப்புரத்தில் நால்வர், எர்ணாகுளம் மற்றும் கொல்லத்தில் தலா இருவர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி, மூவாட்டுப்புழா, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களில், தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த ஒரு குழந்தையும் அடங்கும். காணாமல் போன 10 பேரை மீட்புக் குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனடியாக ரூ.10,000 இறுதிச் சடங்கு உதவியை அறிவித்துள்ளது.

45
கேரள அரசு முடிவு
Image Credit : Asianet News

கேரள அரசு முடிவு

மாநிலம் முழுவதும் 316 நிவாரண முகாம்களை அமைத்துள்ளதாகவும், அவற்றில் 11,018 பேர் தங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளம் வடிந்து வீடுகளுக்குத் திரும்புவோருக்கு உடனடி உதவியாக ரூ.10,000 வழங்கப்படும். மேலும், வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கான இழப்பீட்டை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தியுள்ளனர். 

பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கான உதவியை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தி அரசு முடிவு செய்துள்ளது. பயிர்களை இழந்த 3,596 விவசாயிகளுக்கான இழப்பீட்டை மாற்றி அமைக்கவும் விவசாயத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக 165 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

55
பேரிடர் எச்சரிக்கை.. கடலோர மக்கள் ஜாக்கிரதை
Image Credit : ANI

பேரிடர் எச்சரிக்கை.. கடலோர மக்கள் ஜாக்கிரதை

வானிலை ஆய்வு மையம் (IMD) மாநிலத்தின் அனைத்து 14 மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்சூர், பாலக்காடு, கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். கடல் கொந்தளிப்பாக இருப்பதால் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடற்கரையோர மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிகள் விடுமுறை
விடுமுறை
கேரளா
மழை செய்திகள்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Money : புதிய கரன்ஸி நோட்டுக்கு ஏன் தனி வாசனை வருகிறது? இதுக்குப் பின்னாடி என்ன காரணம்?
Recommended image2
Money : புதிய கரன்ஸி நோட்டுக்கு ஏன் தனி வாசனை வருகிறது? இதுக்குப் பின்னாடி என்ன காரணம்?
Recommended image3
Heart Transplant : 2 மணி நேரத்தில் 250 கி.மீ! ரயிலில் பயணித்த இதயம்...உயிரைக் காப்பாற்ற நடந்த போராட்டம்!
Related Stories
Recommended image1
Fake Rice: உங்க அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கா? கலப்படத்தை கண்டறிய 4 ஈஸி டிப்ஸ்.!
Recommended image2
Income Tax Notice: வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved