தமிழகத்தில் பிரிவினையை ஏற்படுத்த ம.நடராஜன் முயற்சி செய்கிறார். அவரை அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அல்லது முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அடக்கி வைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.சுப்பிரமணியசாமி எச்சரிக்கை செய்துள்ளார்.
அதேசமயம், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக போராட்டம் நடத்தும் இளைஞர்களை பொறுக்கிகள் என்றும்தொடர்ந்து அவர் அவதூறாக பேசி வருகிறார்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், தொடர்ந்து 3வது ஆண்டாக போட்டி நடத்தமுடியாமல் தடைபட்டுள்ளது. இந்த முறை போட்டியை நடத்தியே தீர வேண்டும் என இளைஞர்கள் கடந்த 4 நாட்களாக தமிழகம் எங்கும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தினால் தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணிய சாமி கூறி சர்ச்சையை தொடங்கி வைத்தார்.
அதன்பின், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களை பொறுக்கிகள் என்று அவதூறாக டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழக மக்கள், அரசியல் கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து, கடந்த 3 நாட்களாக இளைஞர்கள் இரவு, பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி டுவிட்டரில் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
சுப்பிரமணி சாமி வெளியிட்ட கருத்தில் “ தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் அனைத்து பொறுக்கிகளும் டுவிட்டரில் எனக்கு பதில் அளித்து, சவால் விடுத்து வருகிறார்கள்.
அந்த பொறுக்கிகள் எல்லாம், சமூதாயத்துக்கு தேவையில்லாதவர்கள். மனநிலைபாதிக்கப்பட்டவர்களாக பதிவிடுகிறார்கள். அவர்களை நான் ஒதுக்கித்தள்ளுகிறேன்.
தமிழகம் என்று தொன்மையான கலாச்சாரத்தையும், வீரத்தையும் கொண்டது. ஆனால், இந்த பொறுக்கிகள் தமிழ்கலாச்சாரத்துக்கு அவப்பெயரை உண்டாக்குகிறார்கள்.
என்ன ஒரு பொறுக்கி கொலை செய்துவிடுவேன் என்றும், மிகவும் அறுவறுக்ககத்த வகையிலும் என்னை அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளான்.
அவர் ஒரு அனாதை. நல்ல அறிவார்ந்த சமூகத்தில் இதுபோன்ற பொறுக்கிகளை பார்க்க முடியாது. மெரீனாவில் அமைதியாக போராட்டம் நடத்தும் பொறுக்கிகள் ஏன் பா,ஜனதா கட்சியை இழுக்குகிறீர்கள்?
அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவர் ம.நடராஜன் தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசி வருகிறார். அவர் நிறுத்திக்கொள்ளகூறி சசிகலா அல்லது முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எச்சரிக்கை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மத்திய அரசு தலையிட்டு, அதை நிறுத்த வேண்டியது இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.
