மூழ்கிக் கொண்டிருக்கும் நகரமான ஜோஷிமத்தில் உள்ள 600 வீடுகள் செயற்கைக்கோள்கள் மூலம் கணக்கெடுப்புக்குப் பிறகு அங்கு வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

உத்தரகாண்டில் மூழ்கிக் கொண்டிருக்கும் நகரமான ஜோஷிமத்தில் உள்ள 600 வீடுகள் செயற்கைக்கோள்கள் மூலம் கணக்கெடுப்புக்குப் பிறகு அங்கு வசிப்போர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, தற்போதைய நிலவரப்படி, 600 வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளது. சுமார் 4,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.வீடுகள் மட்டுமல்லாமல், இராணுவம் சார்ந்த இடங்களிலும் சில விரிசல்கள் காணப்படுகிறது. அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

இதையும் படிங்க..Pongal 2023 : பொங்கல் தினத்துக்கு இத்தனை நாள் விடுமுறையா? கூடுதலாக 2 நாட்கள் லீவ் கிடைக்குமா?

இதற்கிடையில், எல்லை மேலாண்மை செயலாளர் டாக்டர் தர்மேந்திர சிங் கங்வார் தலைமையிலான உயர்மட்ட மத்திய குழு டேராடூனுக்கு வந்து முதல்வர் புஷ்கர் சிங் தாமியை சந்தித்தது. கடலில் மூழ்கி உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு, வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள வீடுகளுக்கு, மாவட்ட நிர்வாகம், சிவப்பு குறுக்கு அடையாளங்களை வைத்துள்ளது.

இதையும் படிங்க..TN Assembly 2023 : உப்புச் சப்பில்லாத ஆளுநர் உரை இது.! திமுகவா? ஆளுநரா? ஓபிஎஸ் என்ன இப்படி சொல்லிட்டாரு.!!

அதில் தங்கியிருப்பவர்கள் தற்காலிக நிவாரண மையங்கள் அல்லது வாடகை விடுதிகளுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டது. இதற்காக ஒவ்வொரு குடும்பமும் மாநில அரசிடமிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதம் ரூ.4,000 உதவி பெறும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பத்ரிநாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் நுழைவாயில் போன்ற பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. புனித நகரமான பத்ரிநாத் தற்போது மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆபத்து, தடுப்பு மற்றும் முற்றிலும் பாதுகாப்பானது என்று பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..தமிழகத்தின் தலைமகன் பொய் சொல்ல முடியுமா? எல்லாமே அவங்க நாடகம்.! திமுகவை வெளுத்து வாங்கிய பாஜக அண்ணாமலை