டேராடூனில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டின் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். டேராடூனில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உத்தரகாண்டில் அறிமுகப்படுத்தப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க : ஷர்தா வாக்கர் கொலையை போலவே மீண்டும்.. பெண்ணின் உடலை 6 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த வீட்டு உரிமையாளர்

உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன், இது வசதியான பயண அனுபவத்தின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த ரயில் பயணம் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

தூய்மையான பொதுப் போக்குவரத்தை வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்பட்ட இந்திய ரயில்வே, நாட்டில் ரயில் பாதையை முழுமையாக மின்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திசையில் முன்னேறி, பிரதமர் உத்தரகாண்டில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைப் பகுதிகளை அர்ப்பணிப்பார்.

இதன் மூலம், மாநிலம் முழுவதும் ரயில் பாதை 100% மின்மயமாக்கப்படும். மின்மயமாக்கப்பட்ட பிரிவுகளில் மின்சார இழுவை மூலம் இயக்கப்படும் ரயில்கள் ரயில்களின் வேகத்தை அதிகரித்து, இழுத்துச் செல்லும் திறனை அதிகரிக்கும்.

மே 29 முதல் இந்த வந்தே பாரத் ரயிலின் வழக்கமான சேவை தொடங்கும். 4 மணி நேரம் 45 நிமிடங்களில் 302 கி.மீ தூரத்தை இந்த ரயில் கடக்கும். புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் ரயில் இயக்கப்படும். ஏசி கார் கோச்சில் டெல்லியில் இருந்து டேராடூனுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.1,065 எனவும், எக்ஸிகியூட்டிவ் சேர் காரில் ரூ.1,890 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க : தமிழ் மொழி ஒவ்வொரு இந்தியனின் மொழி.. நாடு திரும்பிய பிரதமர் மோடி அதிரடி சரவெடி பேச்சு..!