Asianet News TamilAsianet News Tamil

விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் உரையாடினார் பிரதமர் மோடி..

விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி, 10,000வது மலிவு விலை மக்கள் மருந்தகத்தையும் திறந்து வைத்தார்.

PM Narendra Modi interacts with beneficiaries of Viksit Bharat Sankalp Yatra Rya
Author
First Published Nov 30, 2023, 12:21 PM IST

பிரதமர் நரேந்திர மோடி இன்று விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். இந்த உரையாடலில் யாத்திரையின் முடிவுகள் மற்றும் அனுபவங்கள் மற்றும் தேசத்தின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி நகர்த்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகியவை குறித்து பிரதமர் கேட்டறிந்தார். 

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா திட்டம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்தத் திட்டங்களின் பலன்கள் இலக்கு வைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை நவம்பர் 15 அன்று ஜார்கண்ட் மாநிலம் குந்தியில் இருந்து பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் கீழ் ஆன்-ஸ்பாட் சேவைகளின் ஒரு பகுதியாக, கிராம பஞ்சாயத்துகளில் IEC வேன் நிறுத்தப்படும் இடங்களில் சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நவம்பர் 26, 2023 நிலவரப்படி, 995 கிராம பஞ்சாயத்துகளில் 5,470 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன, மொத்தம் 7,82,000 பேர் வருகை தந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நேரலை உரையாடலின் போது, பிரதமர் மோடி, பிரதான் மந்திரி மகிளா கிசான் ட்ரோன் கேந்திரா திட்டத்தை தொடங்கி வைத்தார். பெண்களின் சுய உதவிக்குழுக்க. வாழ்வாதார உதவிக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உதவு முன்முயற்சியாகும். அதன்படி மகளிர் உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்களை வழங்கப்படும். அடுத்த மூன்று ஆண்டுகளில், 15,000 ஆளில்லா விமானங்கள் பெண் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும், மேலும் ட்ரோன்களை பறக்க வைக்க மற்றும் பயன்படுத்த தேவையான பயிற்சியும் அளிக்கப்படும். இந்த முயற்சி இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான ஒரு படியாகும்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: 7 புதிய மசோதாக்களை தாக்கல் செய்யும் மத்திய அரசு!

மலிவு விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முக்கிய முயற்சியான எய்ம்ஸ் தியோகரில் 10,000 வது ஜன ஔஷதி கேந்திரா எனப்படும் மலிவு விலை மக்கள் மருந்து மையத்தையும் பிரதமர் மோடி அர்ப்பணித்தார். இதையொட்டி, நாட்டில் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இந்த இரண்டு முயற்சிகளும் முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரதமரின் சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கி 41 தொழிலாளர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைவரின் மன உறுதிக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். பல தடங்கல்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில்  400 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மீட்புப்பணிகளின் விளைவாக 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios