இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் உரையாற்றுகிறார்.

சௌராஷ்டிரா - தமிழ் சங்கமம் (எஸ்டி சங்கமம்) நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 26ம் தேதி) காலை 10.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுகிறார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இத்திட்டம் 10 நாட்கள் நடைபெறுகிறது. முன்னதாக, காசி - தமிழ் சங்க நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு மாநிலங்களுக்கிடையில் முன்னோடியில்லாத கலாச்சார ஈடுபாட்டிற்காக இந்த நிகழ்வு எப்போதும் நினைவுகூரப்படும். இரு மாநில மக்களுக்கு இடையே பாலமாகவும் செயல்படும்.

நிறைவு விழாவில் நிகழ்ச்சியின் அனுபவங்களை பிரதமர் நிச்சயம் விவாதிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் இருவேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஒரு மேடையில் ஒன்றிணைந்து கலாச்சார பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. மாநிலங்களுக்கிடையிலான பழமையான உறவு மறுவரையறை செய்யப்படுகிறது.

Scroll to load tweet…

இரு மாநில மக்கள் ஒருவருக்கொருவர் கலை, கலாச்சாரம், மொழி, வாழ்க்கை முறை போன்றவற்றை முழுமையாக அறிந்திருக்கிறார்கள். அறிவு பரிமாற்றம் செய்யப்படுகிறது. சௌராஷ்டிரா - தமிழ் சங்கத்திற்கு முன், காசி-தமிழ் சங்கம் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…

இதையும் படிங்க..தனது ஊழியருக்கு 1500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்த முகேஷ் அம்பானி..யாருப்பா அது.?