மீண்டும் தாக்குதல்...! பாக் வீரர்கள் 9 பேர் பலி!
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுகிவ வீரர்கள் 44 பேர் பலியாகிய சம்பவம் நாட்டையே உலுக்கியது.
மீண்டும் தாக்குதல்...! பாக் வீரர்கள் 9 பேர் பலி!
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுகிவ வீரர்கள் 44 பேர் பலியாகிய சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் நடந்து முடிந்து நான்கு நாட்களில் மீண்டும், பயங்கர வாதிகள் பாகிஸ்தானில் தாக்குதலை நடத்தி உள்ளனர்.
குவெட்டாவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்ற கான்வாயில் நேற்று இரவு பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில், 9 வீரர்கள் பலியானதாகவும்,11 வீரர்கள் காயமுற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த தாக்குதல் பற்றி அரசு தரப்பில் இருந்து எந்த வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காஸ்மீரில் நடத்திய தாக்குதலை போலவே, இந்த தாக்குதலும் நடந்து உள்ளது என கூறப்படுகிறது. மேலும் இது இந்தியாவை சமாதானப்படுத்தும் வேலையா அல்லது இதற்கு பின்னணி என்ன என்பது குறித்து ஆராய தொடங்கி உள்ளது உளவுத்துறை.