கேரளா அரசு இன்று ஞாயிற்று கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், புதிய நிபா வைரஸ் தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், மேலும் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் 42 மாதிரிகளின் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுடைய முடிவுகளும் எதிர்மறையாக வந்துள்ளது என்று கூறியுள்ளது.

இன்று ஞாயிற்று கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் இந்த நெகட்டிவ் முடிவுகள் குறித்து அறிவித்தார். மேலும் சில மாதிரிகளின் சோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றும், அந்த முடிவுகளும் விரைவில் வெளியாகும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதிய பாசிட்டிவ் வழக்குகள் எதுவும் பதிவாகாததால் எவ்வளவு காலம் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டதற்கு, வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின்படி, கடைசி நேர்மறை வழக்கிலிருந்து 42 நாட்கள் ஆகும் என்று அமைச்சர் அதற்கு பதில் அளித்துள்ளார். 

பெண்கள் இடஒதுக்கீடு மசோதா: காங்கிரஸ் வலியுறுத்தல்!

பாதிக்கப்பட்டவர்கள் பார்வையிட்ட பகுதியில் இருந்த பல நபர்களை, தொலைபேசியில் அழைத்தபோது அவர்கள் வரமறுப்பதால், தொடர்புத் தடயத்தை முடிக்க காவல்துறை உதவி கோரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்". 

அனைத்து நிபா பாசிட்டிவ் நோயாளிகளும், மேலும் வென்டிலேட்டர் ஆதரவில் இருந்த ஒன்பது வயது சிறுவனின் உடல்நிலையிலும் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். தற்போது மாநிலத்தில் 6 பேருக்கு நிபா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.13,000 கோடி மதிப்பிலான விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி