Asianet News TamilAsianet News Tamil

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: தீர்ப்பு தேதி தள்ளி வைப்பு!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

No interim bail for Chandrababu Naidu SupremeCourt reserves verdict smp
Author
First Published Oct 17, 2023, 5:32 PM IST

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு ஆந்திர முதல்வராக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சந்திரபாபுவை ஆந்திர சிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சந்திரபாபு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, ஃபைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஆந்திர அரசு பதிவு செய்தது. இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கியது.

முன்னதாக, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் தன் மீதான எஃப்ஐஆரை ரத்து செய்ய மறுத்த ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல், ஃபைபர்நெட் முறைகேடு வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் மறுத்த ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மற்றொரு மேல்முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார்.

இதில், திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் எஃப்ஐஆரை ரத்து செய்ய கோரிய மேல்முறையீட்டு வழக்கு தொடர்பான விசாரணையின் போது, சந்திரபாபு நாயுடு சார்பில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர்கள், அவருக்கு இடைக்கால ஜாமீன் கோரினர். இதையடுத்து, வழக்கின் முக்கிய அம்சத்தை நாங்கள் விசாரித்துள்ளோம். தீர்ப்பு விரைவில் வழங்கப்படவுள்ளது. எனவே, இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு!

அதேபோல், ஃபைபர்நெட் முறைகேடு வழக்கில் அக்டோபர் 20ஆம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

இதனிடையே, திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஜாமீன் கோரிய சந்திரபாபு நாயுடுவின் மனுவை அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios