மோடி இன்னொரு மகாத்மா காந்தியாம்..!!! - புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர்
பிரதமர் நரேந்திர மோடி, மற்றொரு மகாத்மா காந்தி, அவர் தேசப்பிதா. தனது செயலால் பல இளைய தலைமுறைகளை அவர் ஈர்த்துள்ளார் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மகாத்மா காந்தியின் உப்பு சத்யாகிரஹா குறித்த புத்தக அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், “ நமக்கெல்லாம் அதிர்ஷ்டவசமாக நமது பிரதமர் மோடி உருவத்தில் நமக்கு இன்னொரு மகாத்மா காந்தி, ேதசப்பிதாகிடைத்து இருக்கிறார். அவர் இளைஞர்களை தனது பேச்சாலும், செயலாலும் ஈர்த்து வருகிறார்.
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கு சுதந்திரத்தின் ஒளியை உணர முடியும் என்று பிரதமர் மோடி மக்களுக்கு உறுதி அளித்து இருந்தார். அவரின் கனவுகள் அனைத்தும், மகாத்மா காந்தியின் கனவுகள் தான். பிரதமர் மோடியின் கருத்துக்களையும், எண்ணங்களையும், உலகம் முழுவதும், மனிதநேயத்தை பரப்பும் வகையில் செய்வது கலாச்சாரத் துறையின் கடமையாகும்.
இந்த புத்தகம் நடப்புகாலத்தில் நம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. மனிதநேயம் உலகத்தக்கு தேவைப்படும் சூழலில் இந்த புத்தகம் அவசியம்’’ எனத் தெரிவித்தார்.