மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஏற்கனவே அறிவித்த தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. 

மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஏற்கனவே அறிவித்த தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10 ஆம் தேதியான இன்று முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்திருந்தார். அதன்படி உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அதன் பின் 2 ஆவது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14 ஆம் தேதியும், 3 அவது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20 ஆம் தேதியும், 4 ஆவது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 23 ஆம் தேதியும், 5 ஆவது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதியும், 6 ஆவது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3 ஆம் தேதியும், 7 ஆவது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7 ஆம் தேதி அன்றும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். மணிப்பூரில் பிப்ரவரி 27ஆம் தேதி முதல்கட்ட தேர்தல், மார்ச் 3 ஆம் தேதி 2 ஆம் கட்ட தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு ஏற்கனவே அறிவித்த தேதியை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3 ஆம் தேதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதேபோல், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், மணிப்பூர் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி, முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டாம்கட்ட தேர்தல் மார்ச் 3 ஆம் தேதிக்கு பதிலாக மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் திட்டமிட்டபடி மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.