- Home
- இந்தியா
- Forbidden Indian Places: இந்தியர்களுக்கே அனுமதி இல்லை.. வெளிநாட்டவர்களுக்கு மட்டும் திறந்திருக்கும் இந்தியாவின் 5 இடங்கள்
Forbidden Indian Places: இந்தியர்களுக்கே அனுமதி இல்லை.. வெளிநாட்டவர்களுக்கு மட்டும் திறந்திருக்கும் இந்தியாவின் 5 இடங்கள்
Forbidden Indian Places: நம் நாட்டிலேயே நமக்கே 'நோ என்ட்ரி' என்று சொல்லப்படும் 5 இடங்கள் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளன. அந்த இடங்கள் எவை, ஏன் இந்த விதி அமலில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இந்தியாவில் இருந்தும் இந்தியர்களுக்கே நோ என்ட்ரி
இந்தியர்களுக்கு நோ.. வெளிநாட்டினருக்கு எஸ்.. ஏன்?
1. வடக்கு சென்டினல் தீவு, அந்தமான்
2. பேரென் தீவு, அந்தமான்
இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை இங்குதான் உள்ளது. விஞ்ஞானிகளும், வெளிநாட்டு ஆய்வாளர்களும் சிறப்பு அனுமதி பெற்று இங்கு தரையிறங்கலாம். ஆனால், இந்தியப் பயணிகள் இந்தத் தீவில் கால் பதிக்கத் தடை. படகு மூலம் தூரத்தில் இருந்து மட்டுமே இந்த எரிமலையைப் பார்க்க முடியும். ஏனெனில், ஒரு தவறு நடந்தாலும் எரிமலைக் குழம்பு மற்றும் விஷ வாயுக்களால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
3. சாங் தாங் வனவிலங்கு சரணாலயம், லடாக்
லடாக்கின் இந்தப் பகுதியில், திபெத்திய காட்டுக்கழுதை (கியாங்) மற்றும் பனிச்சிறுத்தைகள் வாழ்கின்றன. இது சீன எல்லையை ஒட்டி இருப்பதால், 'இன்னர் லைன் பெர்மிட்' பகுதியாக உள்ளது. வெளிநாட்டினர் அரசு வழிகாட்டிகள் மற்றும் ILP அனுமதியுடன் குறிப்பிட்ட பாதைகளில் செல்லலாம். ஆனால், இந்தியர்கள் இதன் மையப் பகுதிக்குள் (core zone) செல்ல அனுமதி இல்லை. நமக்கு பஃபர் சோன் (buffer zone) வரை மட்டுமே அனுமதி உண்டு.
4. குருதோங்மர் ஏரி ராணுவப் பகுதி, சிக்கிம்
சிக்கிமின் புகழ்பெற்ற குருதோங்மர் ஏரி வரை இந்தியர்கள் செல்லலாம். ஆனால், ஏரியின் கரையை ஒட்டி, சீன எல்லையை நோக்கியுள்ள சில மலைப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளன. இந்தப் பகுதிக்குள் இந்தியர்கள் கேமரா, மொபைல் போன்களுடன் செல்வது முற்றிலும் தடை. ஆனால், வெளிநாட்டுப் பயணிகள் PAP அனுமதி பெற்று, வழிகாட்டியுடன் ஒரு குறிப்பிட்ட புள்ளி வரை செல்லலாம். எல்லைப் பாதுகாப்பு கருதி, அங்கு புகைப்படம் எடுப்பது ஆபத்தானது என்பதால் இந்தியர்களுக்கு இந்த கட்டுப்பாடு உள்ளது.

