மாநில முதலமைச்சருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடந்த 2 நாட்களாக இ-மெயில் வந்து கொண்டே இருந்தது. அதை ஒரே நபர் அனுப்பியுள்ளார். அதை திறந்து படித்தபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து இருப்பது தெரியவந்தது.

அதில், அரவிந்த் கேஜ்ரிவாலை விரைவில் கொலை செய்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்துத, கொலை மிரட்டல் வந்த இ-மெயில் குறித்து, அரவிந்த் கேஜ்ரிவால், போலீசில் புகார் செய்தா.

மேலும், இந்த கொலை மிரட்டல் தொடர்புன புகார் குறித்து விசாரிக்க, டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக்குமார் வர்மாவுக்கு, மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, ஒரே நபரிடம் இருந்து 2 முறை இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.