River : இந்தியாவில் பின்னோக்கி ஓடும் ஒரே நதி! இது எங்க இருக்கு தெரியுமா?
Backward Flowing River : நம்ம நாட்டுல எத்தனையோ நதிகள் இருக்கு. எல்லா நதியும் மேடான பகுதியில் இருந்து பள்ளத்தை நோக்கித்தான் பாயும். ஆனா, ஒரே ஒரு நதி மட்டும் பின்னோக்கிப் பாயுதுன்னு சொன்னா நம்புவீங்களா? வாங்க, அந்த நதியைப் பத்திப் பார்க்கலாம்.

பின்னோக்கி நகரும் நதி
பொதுவா, நதிகள் உயரமான மலைகள்ல இருந்து சமவெளிப் பகுதிக்குத்தான் பாயும். இதுதான் நாம சின்ன வயசுல இருந்து படிச்சது. ஆனா, நம்ம இந்தியாவில ஒரு நதி ரொம்ப வித்தியாசமா பாயுது. கேட்கவே ஆச்சரியமா இருந்தாலும், பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அமைதியான சூழல், கரையோரமா நூற்றுக்கணக்கான சிவன் கோயில்கள், அதுக்கு நடுவுல யூ-டர்ன் எடுத்துப் போற இந்த நதியைப் பார்க்க ரெண்டு கண்ணு போதாது. சரி, இந்த விசித்திர நதி எங்க இருக்கு? உண்மையாவே பின்னோக்கிப் பாயுதா? இதுக்குப் பின்னால இருக்குற வரலாறு என்னன்னு பார்க்கலாம் வாங்க.
ராஜா கட்டிய அணைதான் காரணமா?
இந்த இடம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டேஷ்வர். யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, அதன் தனித்துவமான நதிப் பாதைக்காக மட்டுமல்லாமல், ஆன்மிக முக்கியத்துவத்திற்காகவும் புகழ்பெற்றது. பட்டேஷ்வரில் யமுனையின் கரையோரமாக 101-க்கும் மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரே பகுதியில் இத்தனை கோயில்கள் நதிக்கரையை ஒட்டி அமைந்திருப்பது இந்த இடத்தின் முக்கியமான சிறப்புகளில் ஒன்றாகும்.
இந்த நதிக்குப் பின்னாடி ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கு. பதாவர் வம்சத்தைச் சேர்ந்த ராஜா பதன் சிங், யமுனை நதியோட ஓட்டத்தை, அங்க இருக்குற கோயில் படிக்கட்டுகளைத் தொட்டுட்டுப் போற மாதிரி மாத்த நினைச்சார். இதுக்காக, சுமார் 3 கி.மீ. நீளத்துக்கு அரைவட்ட வடிவில் ஒரு கல் அணையைக் கட்டினார். இதனாலதான் நதி பின்னோக்கிப் பாயுதுன்னு உள்ளூர் மக்கள் நம்புறாங்க. ஆனா, அந்த அணை மட்டும் காரணம் இல்லை. அந்தப் பகுதியோட இயற்கையான புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, வரலாற்று ரீதியான கட்டுமானம் எல்லாமே சேர்ந்துதான் பட்டேஷ்வர்ல இந்த அரைவட்டத் திருப்பத்தை உருவாக்கியிருக்கு.
Blood River: தண்ணி இல்ல, ரத்தம் ஓடுற ஆறு நம்ம நாட்டுல எங்க இருக்கு தெரியுமா?
இந்த ஆலயத்தின் சிறப்பு..
பட்டேஷ்வர், வெறும் நதித் திருப்பத்துக்கு மட்டும் ஃபேமஸ் இல்லை. ஆன்மிக ரீதியாகவும் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த இடம். யமுனைக் கரையில வரிசையா 101-க்கும் அதிகமான சிவன் கோயில்கள் இருக்கு. இந்து மத நம்பிக்கையின்படி, வடக்கு அல்லது வடமேற்கு திசையை நோக்கிப் பாயும் நதிகளை (உத்தரவாஹினி) ரொம்பப் புனிதமா கருதுவாங்க. அதனால, காசியைப் போலவே பட்டேஷ்வரையும் ஒரு புண்ணியத் தலமா மக்கள் வழிபடுறாங்க.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயோட சொந்த ஊரும் இந்த பட்டேஷ்வர்தான். சரி, உண்மையாவே தண்ணி ரிவர்ஸ்ல போகுதா? இல்லை. யமுனை நதி தன்னோட மொத்தப் பயணத்தையும் மாத்திக்கிட்டு பின்னோக்கிப் போகலை. ஆனா, பட்டேஷ்வர்ல ஒரு பெரிய அரைவட்ட வளைவுல திரும்புறதால, அங்க நின்னு பார்க்கும்போது நதி எதிர் திசையில போற மாதிரி ஒரு பிரம்மை ஏற்படுது. அவ்வளவுதான் விஷயம்!

