Asianet News TamilAsianet News Tamil

உறவு வேண்டுமா, வேண்டாமா, நீங்க முடிவு செய்யுங்க: பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே கெடு..!

மகாராஷ்டிராவில், பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொள்ள விரும்பவில்லை என சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பின் போது உத்தவ் தாக்கரே பேசியிருப்பது எப்படியும் ஆட்சி அமைத்து விடலாம் என பா.ஜ.க.வுக்கு சிறு நம்பிக்கை கொடுத்துள்ளதாக தகவல்.

maharastra election results
Author
Maharashtra, First Published Nov 8, 2019, 6:51 PM IST

மகாராஷ்டிராவில், பா.ஜ.க.வுடான கூட்டணியை முறித்து கொள்ள விரும்பவில்லை என சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பின் போது உத்தவ் தாக்கரே பேசியிருப்பது எப்படியும் ஆட்சி அமைத்து விடலாம் என பா.ஜ.க.வுக்கு சிறு நம்பிக்கை கொடுத்துள்ளதாக தகவல்.மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற பா.ஜ.க.- சிவ சேனா கூட்டணி விரைவில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி இருந்து வருகிறது. முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுத்தால் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்போம் என சிவ சேனா தெரிவித்தது. ஆனால் அதில் பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை. 

maharastra election results
முதல்வர் பதவியை தவிர வேறு எதுவும் வேண்டும் என்றாலும் கேளுங்க என பா.ஜ.க. கூறுகிறது. ஆனால் சிவ சேனா தனது முடிவில் உறுதியாக உள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று பா.ஜ.க. தலைவர்கள் கவர்னரை சந்தித்து பேசினர். முதலில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறுதான் கோரிக்கை விடுக்கதான் செல்வதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக  கவர்னரிடம் அவர்கள் பேசினர்.

maharastra election results
இதற்கிடையே புதிதாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 56 சிவ சேனா எம்.எல்.ஏ.க்களை அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று சந்தித்து பேசினார். உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசிய பிறகு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அதேசமயம் உத்தவ் தாக்கரே எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசும்போது, பா.ஜ.க.வுடான உறவை துண்டித்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் அது பா.ஜ.க. எடுக்கும் முடிவில் (முதல்வர் பதவி) உள்ளது என தெரிவித்து இருந்தார். உத்தவ் தாக்கரேவின் இந்த பேச்சு எப்படியும் மகாராஷ்டிராவில் ஆட்சியை மீண்டும் அமைத்து விடலாம் பா.ஜ.க.வுக்கு சிறு நம்பிக்கை கொடுத்துள்ளது. அதேசமயம் நாளைக்குள் எந்தகட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றால் அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்.

Follow Us:
Download App:
  • android
  • ios