சோனியா காந்தியின் உதவியாளர் மீது பாலியல் புகார்...! 26 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனி உதவியாளர் மீது 26 வயது பெண் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சோனியா காந்தி உதவியாளர் மீது புகார்
காங்கிரஸ் கட்சி பொறுப்பு தலைவராக இருப்பவர் சோனியா காந்தி, இவருடைய தனி செயலாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் 71 வயதுடைய பி.பி.மாதவன், சோனியா காந்தியை சந்திக்க பி.பி.மாதவனிடம் தான் அனுமதி பெற வேண்டும் அந்தளவிற்கு மிகவும் உயர் பொறுப்பில் உள்ளவனர். அவர் மீது தான் தற்போது பாலியல் புகார் ஒன்று கூறப்பட்டுள்ளது. டெல்லி உத்தம்நகர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட 26 வயது பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், காங்கிரஸ் அலுவலகத்தில் போர்டுகளை வைப்பது மற்றும் பிற வேலைகளைச் தனது கணவர் செய்து வந்ததாகவும், இதனையடுத்து தனது கணவர் 2020 ஆம் ஆண்டு விபத்தில் இறந்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து வாழ்வாதரத்திற்காக வேலை தேடியதாகவும், அப்போது மாதவனை தொடர்பு கொண்டபோது என்னை நேர்காணலுக்கு அழைத்தாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறிது நாட்களில் வீடியோ கால் செய்தும் வாட்ஸ் அப்பிலும் சாட்டிங் செய்ததாக கூறியுள்ளார்.
நடுரோட்டில் வைத்து இளம்பெண்ணை இப்படியா செய்வீங்க.. கணவனை அலேக்கா தூக்கிய போலீஸ்..!
இளம்பெண் பாலியல் புகார்
இதனையடுத்து தன்னை தனியாக சந்தித்ததாகவும், காரில் வைத்து தன்னை அடித்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த பிப்ரவரி மாதம் சுந்தர் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும், மாதவன் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகாரில் கூறியுள்ளார். இந்த விஷயத்தை போலீசில் தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மாதவன் எச்சரித்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இதையடுத்து மாதவன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்... அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சோனியாகந்தியின் உதவியாளர் மாதவன், அரசியல் ரீதியாக பழிவாங்கும் வகையிலும், தனது இமேஜை கொச்சைப்படுத்தும் நோக்கிலும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். எனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட தவறான புகாருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். சோனியாகாந்தயின் உதவியாளர் மீது 26 வயது பெண் பாலியல் புகார் கொடுகப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.