சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரம் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ள நிலையில் சென்னையில் உள்ள கேரள சுற்றுலா அலுவலகம் மீது நேற்று நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. சாமியே சரணம் அய்யப்பா என கோஷம் எழுப்பியபடி வந்த இந்து அமைப்பினர் கண்ணிமைக்கும் நேரத்தில் கற்களால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.

சபரிமலைஅய்யப்பன்கோவிலில், இதுவரைஇல்லாதவகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்டபெண்களையும்அனுமதித்துஉச்சநீதிமன்றம் கடந்தசெப்டம்பர்மாதம் 28-ந்தேதிஉத்தரவிட்டது. இதற்குஎதிர்ப்புதெரிவித்துபோராட்டம்நடைபெற்றுவருகிறது. பெண்களைஅனுமதிக்கும்விவகாரத்தில்மாநிலத்தில்உள்ளஇடதுசாரிஅரசுஉறுதியாகஇருந்தது

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உச்சநீதிமன்றஉத்தரவிற்குபின்னர்கோவில்திறக்கப்பட்டபோதுபெண்களைஅனுமதிக்கஎதிர்ப்புதெரிவித்துபோராட்டம்நடைபெற்றதால்அவர்கள்செல்லமுடியவில்லை. பெண்களையும்அனுமதிப்பதற்குஎதிராககாங்கிரஸ், பாஜக ,ஆர்.எஸ்.எஸ். மற்றும்இந்துஅமைப்புகள்தீவிரமாகபோராட்டம்நடத்திவருகின்றன.

இந்தநிலையில், கோழிக்கோட்டைசேர்ந்தபிந்துமற்றும் மலப்புரத்தைசேர்ந்தகனகதுர்காஆகிய 2 பெண்கள்நேற்று அதிகாலையில்சபரிமலைஅய்யப்பனைதரிசித்தனர். இந்தசம்பவத்தைமுதலமைச்சர் பினராயிவிஜயனும்உறுதிசெய்தார்இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சென்னையிலும் அது எதிரொலித்தது.

நேற்று நள்ளிரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள சுற்றுலா அலுவலகம் மீது நேற்று நள்ளிரவில் தாக்குதல் நடத்தப்பட்டது. சாமியே சரணம் அய்யப்பா என கோஷம் எழுப்பியபடி வந்த இந்து அமைப்பினர் கண்ணிமைக்கும் நேரத்தில் கற்களால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.

சுமார் 15 க்கும் மேற்பட்டோர் அங்கு வந்ததாகவும், நள்ளிரவு நேரம் என்பதால் பணியாளர்கள் யாரும் இல்லை. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.